search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg"

    • நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    கடந்த 2-ந் தேதி 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று மேலும் 10 காசு அதிகரித்துள்ளது முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலை ஆகும்.

    நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு:-

    சென்னை-575 காசு, ஹைதராபாத்-549, விஜயவாடா-546, பர்வாலா-557, மும்பை-606, மைசூரு-567, பெங்களூரு-565, கொல்கத்தா-615, டெல்லி-575 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி ஒரு கிலோ ரூ.82-க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 எனவும் எவ்வித மாற்றம் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    நாமக்கல்:

    முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.55 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று இரவு அறிவித்துள்ளது.

    இந்த விலை உயர்வு நாளை (9-1-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.

    முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.65 காசுகள் என்பது கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை.

    • கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 530 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை பத்து காசுகள் உயர்த்தி 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    நாமக்கலில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

    பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, ரூ.2 உயர்த்தி ஒரு கிலோ ரூ.113 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
    • பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
    • ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.

    இதனால் 535 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

    சென்னை-575, ஹைதராபாத்-530, விஜயவாடா-529, பார்வாலா-538, மும்பை-590, மைசூர்-550, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி உற்பத்தி விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரு கிலோ ரூ.98 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    • கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    நாமக்கல் :

    நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு, சென்னை-530 காசு, ஹைதராபாத்-499 காசு, விஜயவாடா-509, பார்வலா-504, மும்பை-556, மைசூர்-520, பெங்களூரு-520, கொல்கத்த-580, டெல்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர்.
    • முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10-க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வடமாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
    • ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.

    மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.

    இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.
    • முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம்.

    குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும், தேவையான கனிம சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்படுதல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலக முட்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். இந்த ஆண்டு உலக முட்டை தின கருப்பொருளாக, 'சிறந்த வாழ்க்கையை சாத்தியமாக்கும் முட்டை' என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாளில் ஊட்டச்சத்துமிக்க முட்டையை தினமும் உணவில் சேர்த்து உடலை வலுப்படுத்துவோம் என அனைவருமே உறுதிமொழி ஏற்போம்.

    கடந்த ஆண்டு உலக முட்டை தினத்தையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சமூக வலைதளங்களில் முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் பல போட்டிகளை வைத்து முட்டை உண்பதில் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டும் முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம். வளரும் தலைமுறையினரை வலுவாக்குவோம்.

    ×