என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Egg Recipes"
- முட்டையை வைத்து பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.
நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
- மாலைநேர சிற்றுண்டியாக இந்த ரெசிபியை சாப்பிடலாம்.
- தோசை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கரண்டி
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.
முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). அடித்து வைத்த முட்டையை தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.
பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்.
கடைசியாக மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சூப்பரான கொத்து தோசை ரெடி.
- வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
- கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
செய்முறை :
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .
சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!
- மாலைநேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
- வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
முட்டை - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சிறிதளவு கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும், மிளகுப்பொடி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும். மசாலா பச்சை வாசனை போய் முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* பிசைந்த சப்பாத்தி மாவினை, மிகவும் மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் முட்டை மசாலாவை வைத்து கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
* இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான முட்டை சமோசா ரெடி.
- முட்டை ஆப்பம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இந்த ஆப்பம் செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
உளுந்து - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சமையல் சோடா - 3 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
முட்டை மசலாவிற்கு :
முட்டை - மூன்று
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.
* அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
* ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.
* பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.
* சுவையான முட்டை ஆப்பம் ரெடி.
* இத்துடன் காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
- இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -2-3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.
முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.
- தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.
முட்டை - 2
பசலைக்கீரை - 1 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
வெங்காயம் - 1
முட்டை - 3
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சிவப்பு முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டை - 2
ப.மிளகாய் - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டை கலவையை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
முட்டை - 2
வெங்காயம் - 2
பூண்டு - 1
காய்ந்த மிளகாய் - 10
உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
புளித்தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிக்ஸ்டு ஆயில் - தேவையான அளவு
செய்முறை
முட்டையை வேக வைத்துகொள்ளவும்.
வெங்காயம், பூண்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொரித்து கொள்ளவும். (மொறு மொறு என்று பொரிந்திருக்க வேண்டும்)
அடுத்து பூண்டைபோட்டு அதே போல் பொரித்து கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாயை கைகளால் நொறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டைபோட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் தேவையான அளவு ( காரத்திற்கேற்ப) நொறுக்கிய வறுத்த மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு முட்டையை எடுத்து நடுவில் சிறிதளவு கீறிக் அதன் நடுவில் வறுத்த வெங்காய மசாலாவை சிறிதளவு வைத்து மேலே சிறிதளவு உப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, புளிக்கரைசல், மிக்ஸ்டு ஆயில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை வைத்து பரிமாறவும்.
சூப்பரான முட்டை பேஜோ ரெடி.
இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - சிறிதளவு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.
இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்