search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drone attack"

    • ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
    • மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் அளித்து வருவதால் இப்போரில் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதில் ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது.

    மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது. அங்கு பெரும் கரும்புகை வெளியேறியது. பயங்கர வெடிசத்தங்களை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு அலறியபடி வெளியே வந்தனர்.

    இந்த தாக்குதல் காரணமாக கிடங்கை சுற்றி 5 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் வெளியாகின.

    ரெயில் நிலையம் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் இருந்து விண்ணை மூட்டும் தீ பிழம்பு எழுப்பும் காட்சி பதிவாகி இருந்தது. மற்றொரு வீடியோவில் விமான நிலையம் அருகே புகை மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும் காட்சி இருந்தது.

    இதுகுறித்து கிரிமியா கவர்னர் செர்ஜி அக்சியோ னோவ் கூறும்போது, வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் கிரிமியா பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும் போது, கிரிமியாவின் ஒக்ய பிரஸ்கி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரஷிய ராணுவ கிடங்குகள் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்தது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் கிரிமியா பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமீயா பாலத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலம் மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்ரவரியில் முழுமையாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.
    • புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

    இப்போரில் ரஷிய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா, உக்ரைன் தெரிவித்துள்ளன.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவுகளுக்கு ரஷிய ராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக போர் ஆய்வுக்கான நிறுவனம் ஒன்று கூறியதாவது:-

    உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினுக்கு ராணுவ தளபதிகளால் காட்டப்படும் கீழ்ப்படியாமை தற்போது ராணுவ வீரர்களிடமும் பரவி வருகிறது.

    உக்ரைன் மீது போரை தொடங்கியதில் இருந்து, பலனற்ற கட்டமைப்புகள், குழுக்களில் நம்பிக்கையின்மை அல்லது வெளிப்படைத்தன்மை, துருப்புகளின் குறைந்த மன உறுதி ஆகியவற்றுடன் ரஷிய படைகள் போராடின.

    58-வது ஒருங்கிணைந்த ஆயுத ராணுவ தளபதி கர்னல் ஜெனரல் இவான் போபோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ரஷிய ராணுவத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

    இதே போல் பல ராணுவ தளபதிகள் மோதல் போக்குடன் உள்ளனர்.

    கர்னல் ஜெனரல் மைக்கேல் டெப்லின்ஸ்கியை கைது செய்தால், கைப்பற்றப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் இருந்து வெளியேறு வோம் என்று ரஷிய ராணுவத்தின் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தளபதிகள் மத்தியில் உள்ள கீழ்ப்படியாமை அவர்களின் சில வீரர்க ளுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகிறது. ராணுவ தளபதிகள் மத்தியில் கீழ்ப்படியாமை அதிகரித்து வருவது ரஷிய ராணுவ தலைமையை இன்னும் வெளிப்படையாக எதிர்க்க மற்ற உயர்மட்ட அதிகாரிகளை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.

    ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு உதவிய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது.

    இதன் மூலம் புதினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகியது. இந்த நிலையில் புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன.
    • இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, உக்ரைன் தரப்பில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கிவருகின்றன. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. இழந்த பகுதிகளை உக்ரைன் படைகள் படிப்படியாக மீட்கத் தொடங்கி உள்ளன. 

    இந்நிலையில், ரஷியாவையும்- அந்த நாட்டுடன் இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தின் மீது இன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உடனடியாக பாலம் மூடப்பட்டது. தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் மகள் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

    தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து கெர்ச் பாலத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 19 கிமீ இடைவெளியில் ரெயில் போக்குவரத்தும் சுமார் ஆறு மணி நேரம் நிறுத்தப்பட்டது. பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ரஷிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    உக்ரைன் தரப்பில் இருந்து இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.

    இந்த பாலம் மீது இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரக் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பல மாதமாக சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
    • உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    மாஸ்கோ:

    ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து விட்டன.

    இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் அரசு கிரீமிய தீபகற்ப பகுதிகள் அருகே 7 ஆளில்லா டிரோன்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

    இந்த தாக்குதல் முயற்சியில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை. 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. மற்ற டிரோன்கள் போர் படைகளை கொண்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.

    ஆனால் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.

    கிரீமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வர இணைப்பு மேம்பாலம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் அதையும் உக்ரைன் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவுக்கு ஈரான் டிரோன்கள் வழங்கி வருகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
    • உக்ரைன் மீதான போருக்குப்பின் வழங்குவதை நிறுத்துவிட்டோம் எனக் கூறுகிறது ஈரான்

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது.

    மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது.

    தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

    உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார்.

    ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

    • உக்ரைன், ரஷியா அதிக தாக்குதலுக்கு அதிக அளவில் டிரோன்களை பயன்படுத்துகின்றன
    • தற்போது நடைபெற்ற தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்

    ரஷியா- உக்ரைன் போரில் தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் சிலர் காயம் அடைந்தனர்.

    பதிலுக்கு ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் இன்று இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்மேற்கு ரஷியாவின் மத்திய வொரோனெஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் அந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோதல் நேரங்களில் அமெரிக்கா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.
    • குறைந்த செலவே என்பதால் பயங்கரவாதிகளும் அதிகமாக பயன்படுத்துகின்றன.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆரம்ப கட்டத்தில் ஏவுகணை, போர் விமானம், டாங்கிகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைத்தது ரஷியா.

    அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய, உக்ரைனும் ரஷியா மீது திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நேருக்கு நேர் மோதல், விமான தாக்குதல் குறைந்து டிரோன்களை பயன்படுத்தி வருகின்றன.

    செலவும் குறைவு, வீரர்கள் மரணமும் கிடையாது. சேதப்படுத்தும் இடம் அதிகம். இதனால் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த 30-ந்தேதி (நேற்று முன்தினம்) உக்ரைன் திடீரென ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. சுமார் 8 டிரோன்கள் இதற்காக பயன்படுத்தியதாக ரஷியா குற்றம்சுமத்தியுள்ளது.

    இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்களும் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின.

    இரண்டு நாடுகளும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரேன்களை அனுப்பி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க செய்கின்றனர். இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

    வான்வெளி தாக்குதலுக்கு டிரோன்களை பயன்படுத்துவது உலக நாடுகளில் அதிகரித்துள்ளதால் இது பேராபத்தாக முடியுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டிரோன் கண்டுபிடிக்கப்பட்டபோது உளவு பார்ப்பதற்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தின. எதிரி நாடுகள் எல்லைக்குள் சென்று உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    தற்போது எந்த இடத்தில் இருந்து டிரோன் தங்கள் எல்லைக்குள் ஊடுருவுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாடுகளுக்கும் தலைதூக்கியுள்ளது.

    உலக வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் சர்வதேச சட்டம் கொண்டு வந்து இதை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, டிரோன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

    டிரோன் பயன்பாடு, வாங்குவது, பயன்படுத்துவது மற்றும் அதன் ஆபத்து

    1. மோதலின்போது அமெரிக்கா உள்ளிட்ட 100 நாடுகள் டிரோன்கள் பயன்படுத்தி வருகின்றன.

    2. குறைந்த செலவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியை இலக்கு வைத்து தாக்க முடியும் என்பதால் பயங்கரவாதிகள் கூட பயன்படுத்துகின்றனர்.

    3. வணிகம் மற்றும் நுகர்வோர் வசதிக்காக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல டிரோன் பயன்படுத்தப்படுகிறது. 2020-ல் இதன் எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்த நிலையில், 2025-க்குள் 7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4. உலகளவில் 2021-ல் இருந்து 2022-ல் விற்பனை 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    5. கடந்த சில வருடங்களாக டிரோன்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அது மீறப்படுகின்றன.

    6. ஒவ்வொரு நாடுகளும் எந்தவித அச்சமின்றி, எதிர் நாடுகள் கேள்வி கேட்கும் என்பது குறித்து கவலையில்லாமல் எளிதாக எந்த இடத்திலும் பறக்க விடுகின்றன. இதற்கு வானில் பறப்பதற்கான சிறிதளவான வழிகாட்டு தல்தான் காரணம்.

    7. ஒவ்வொரு நாடுகளும் வாங்குவது, பயன்படுத்துவதில் தனித்தனி ஆர்வம் காட்டுகின்றன.

    8. சீனா கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கான அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதனை பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதில் மேலும் தொழில்நுட்பத்தை புகுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளன.

    9. துருக்கி அதிநவீன டிரோனை பயன்படுத்துகிறது. துருக்கி பயன்படுத்தும் 'பேராக்டர் டிபி2' என்ற டிரோன், லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது ஒரு டிரக்கில் பொருத்தும் அளவிற்கு சிறிதானது.

    10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து டிரோன்கனை வாங்கி, மோதல் போக்கில் உள்ள ஏமன், லிபியா எல்லையில் ஊடுருவல்களை கண்காணிக்க பயன்படுத்துகிறது.

    11. ஆயுதமேந்திய டிரோன்களை கொண்ட நாடுகள், சர்வதேச வழிகாட்டுகளை கடைபிடிக்காமல், தங்களுக்கென வழிகாட்டுதல்களை தயார் செய்து அதை பின்பற்றுகின்றன.

    12. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்காத வரை அல்லது சொந்த பாதுகாப்பு தவிர்த்து டிரோன் பயன்படுத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது.

    13. ஆனால், ஒரு முழுமையான போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்தில், கண்காணிப்பிற்காக டிரோன்களை பயன்படுத்த முடியும்.

    14. டிரோன் பறப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

    15. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    16. முறையான வழிகாட்டுதல், விதிமுறை இல்லாததால் ஒவ்வொரு நாடுகளும் ராணுவத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என பெரும்பாலான டிரோன் வல்லுநர்கள் கருதுகிறாரள்.

    17. டிரோன்கனை வெவ்வேறு ரிமோட் மூலம் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தேனீக்கள் போன்று ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாக்கும் அபாயம் உள்ளது.

    18. வான்வெளிக்கு வெளியிலும் தாக்குதல் நடத்த முடியும்.

    19. போர்க்களத்தில் டிரோன்களை கண்டறிவது மிகவும் கடினமானதாக உள்ளது.

    20. உக்ரைன், ரஷிய படைகளுக்குக் கூட சரியாக எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய கடினமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டிரோன்கள் வேகமாக செல்லும் வாகனங்களாகின்றன.

    பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த கட்டுரையை விரைவாக எழுதியுள்ளார்.

    • நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 முறை ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்
    • மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

    ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், அதிபர் புதினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்திருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது.

    மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.

    • ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது.
    • ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    டெஹ்ரான்:

    ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் இருக்கும் ராணுவ தொழிற்சாலையின் மீது நேற்று முன்தினம் இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    வெடிகுண்டுகளுடன் 3 டிரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 2 டிரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், ஒரு டிரோன் மட்டும் ராணுவ தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது.

    டிரோன் விழுந்து வெடித்ததில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

    சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
    ரியாத்:

    சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காசிப்-கே2 ரக ஆளில்லா விமானங்களை ஏவி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவுதி விமானப்படை போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×