search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drama"

    • 25-ந்தேதி இரவு வள்ளி திருமணம், நாடகமும் நடைபெறவுள்ளது.
    • விழாவில் ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்ச னையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.

    இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாடகம் நடைபெற்றது, நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு களித்தனர்.

    21-ந்தேதி ஹரிச்சந்திரா முதல்பாகமும், 22ந்தேதி ஹரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும்,24 ந்தேதி லீலா விலாசம் எனும் நாடகமும், 25 ந்தேதி இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறவுள்ளது.

    தினசரி பல்லேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது.

    நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.
    • இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    குமாரபாளையம்:

    கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

    கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.
    • தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கூப்புளிக்காடு கிராமத்தில் கேட்டவர்களுக்கு கேட்டவரம் தரும் ரதிமன்மத சுவாமி கோவிலில் காமன் பண்டிகை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு அணிந்து 13 நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.

    காலை வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வடை, அப்பளம், பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.

    மாலையில் பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவிலிருந்து பூத்தட்டு ஊர்வலம் கூப்புளிக்காடு ரதி மன்மதன் கோவிலை வந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

    அதிகாலை ரதிமன்மதன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது.

    இதையடுத்து காமன் தகனம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கூப்புளிக்காடு கிராமத்தினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோயும், தொற்றுநோயும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.



    தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.

    துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #SterlitePlant

    ×