search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைவிழா"

    • லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • 'சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று எழுதியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் செவ்வாபதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது51). இவர் சமீபத்தில் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிரபலமான மார்க்கம்களி கலைவிழாவின் போட்டி நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

    அந்த போட்டியில் முடிவுகளை அறிவிக்க லஞ்சம் வாங்கியதாக ஷாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷாஜி உள்ளிட்ட 3 பேர் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து கலைவிழா போட்டி முடிவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் நிறுத்தி வைத்தார்.

    மேலும் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்காக ஷாஜி உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் ஷாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் உள்ளிட்ட 3 பேரையும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் ஷாஜி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று இரவு பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர்.

    அதில் ஷாஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற ஷாஜி, அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நான் நிரபராதி, யாரிடமும் பணம் வாங்கவில்லை, நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். இதற்கு சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்' என்று எழுதியிருந்தார்.

    லஞ்ச புகாரில் சிக்கியவர் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
    • ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெயரளவிற்கு நடத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவி களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மிகுந்த ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெய ரளவிற்கு நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகளின் பங்கேற்பு இல்லாததால் போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டது.

    போதிய பங்கேற்பு இல்லாததால் பங்கு பெற்ற ஒருவருக்கு மட்டுமே பரிசும் வழங்க ப்பட்டது. கொடைக்கானல் வட்டார வள மையம் சார்பில் கடந்த 18ஆம் தேதி மாணவ-மாணவி களுக்கான கலை விழா தொடங்கியது. இந்த கலைவிழா நிகழ்வில் விழா 3 நாட்கள் நடத்தப்பட வேண்டும். முதல் நாளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகளுக்காகவும், அடுத்த நாள் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்காகவும், 3ம் நாள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கும் இந்த கலை விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    கொடைக்கானலில் 21 பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர் . ஆனால் கொடைக்கானலில் நடந்த கலைத்திருவிழாவில் சுமார் 150 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 26 வகையான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதல் நாள் போட்டிகளில் 130 மாணவ- மாணவிகள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். 2ம் நாள் போட்டிகளில் சுமார் 60 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 3ம் நாள் போட்டி நடத்தப்படவே இல்லை. மாணவ-மாணவிகள் பங்கேற்காத காரணத்தினால் 3ம் நாள் போட்டி ரத்து செய்ய ப்பட்டது.

    வட்டார வள மைய பொறுப்பு அலுவலர் சகாய செல்வி என்பவர் இந்த கலைத் திருவிழாவிற்கு பொறுப்பு ஏற்று நடத்தியுள்ளார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினாலும் பெயரளவிற்கு நடத்த ப்பட்டதாலும் கொடை க்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளி க்கொணர முடியாமல் இந்த கலைத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக் கொணர்வதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த அடிப்படை நோக்கத்தை தகர்க்கும் விதமாக கொடைக்கானலில் நடந்த கலை விழா நடந்துள்ளது. கொடைக்கானலில் நடந்த கலை விழா பொறுப்பா ளர்கள் முன் தயாரிப்பு சந்திப்புகளையோ, அல்லது 21 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களையோ சந்திக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல், பெயரளவிற்கு இந்த போட்டிகளை நடத்தியுள்ளனர்.

    இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமலும் பரிசுகள் பெற முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த கலை விழா போட்டிகளை ஒருங்கிணைப்புடன் செய்து மலைவாழ் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்று 4-வதுநாள் நிகழ்ச்சியாக அரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகம் நடைபெற்றது.

    இன்று மாலை சென்னை சுதாவிஜயகுமார் குழுவி னரின் பரதநாட்டிய நிகழ்ச்சி யும், நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகமும்,

    25-ந்தேதி வள்ளி திருமணம் எனும் நாட்டிய நாடகமும் நடை பெறவுள்ளது.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

    • 25-ந்தேதி இரவு வள்ளி திருமணம், நாடகமும் நடைபெறவுள்ளது.
    • விழாவில் ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்ச னையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.

    இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாடகம் நடைபெற்றது, நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு களித்தனர்.

    21-ந்தேதி ஹரிச்சந்திரா முதல்பாகமும், 22ந்தேதி ஹரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும்,24 ந்தேதி லீலா விலாசம் எனும் நாடகமும், 25 ந்தேதி இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறவுள்ளது.

    தினசரி பல்லேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது.

    நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்றது
    • பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 2 -ம் நாள் நட்சத்திரா கலைவிழாவில் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணை தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதிஅலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ)சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

    நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    3ம் நாளான இன்று (25 -ந் தேதி) கலை நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன், நடிகர் அருண்விஜய், நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை, சின்னத்திரை நடிகர் அஸ்வத், ராபர்ட், கானா பாடகர் சுதாகர், பாடாகர் பூவையர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா தொடங்கியது
    • மாணவர்கள் தாங்கள் சாதிக்க நினைப்பதை துணிச்சலோடு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் நட்சத்திரா கலைவிழா நேற்று துவங்கியது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-பாடசாலைக் கல்வியானது வகுப்பறைக் கல்வியுடன் நின்று விடக்கூடாது. அது சிந்தனைத்திறன், மொழித்திறன், ஆக்கத்திறன், நடனக் கலைத்திறன் போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

    மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதனையாளர்களாக சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தினைப் பெற வேண்டும்.மாணவர்கள் தாங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தைரியமாகவும், துணிச்சலோடும் செய்யவேண்டும். கலை என்ற சொல் உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் என்றார்.செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், நிவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா கலந்துகொண்டு பேசுகையில், நமக்கான மதிப்பு ஒருவருக்கு புரியவில்லை என்றால் அவர்களை நாம் மதிக்ககூடாது.யாருக்கு பின்னாலும் நாம் செல்லக்கூடாது, சிலர் நம்ம கூட வரவில்லை என்றால் அதற்கான கொடுப்பனை அவர்களுக்கு இல்லை என நினைத்து கொள்ள வேண்டும். எனவே நேரத்தை வீணாடிக்கால் படித்து வாழ்க்கையில் சாதித்து காட்டவேண்டும் என்றார்.

    விழாவில் சினிமா நடிகை இவானா, காமெடியன்கள் மதுரை முத்து, அன்னபாரதி, ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் குழுவினர்கள், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.2 ம் நாளான இன்று (24-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ) சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    மேலும் நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த நட்சத்திர கலை விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

    • வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, கவுன்சிலர் சரசு ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரவண முருகன் வரவேற்றார். இந்த போட்டியில் 16 அரசு நடுநிலைப்பள்ளிகள், 4அரசு உயர்நிலைப்பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்லெட்சுமி, பாண்டிக்குமார், பெரியகருப்பன், சரண்யா, அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார கலை மன்றம் மற்றும் சிவகாசி மாநகராட்சி இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கோலப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

    இதில் மொத்தம் 158 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பற்றியும், தூய்மை இந்தியா இயக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். மேலும் கழிவு மேலாண்மை, மீண்டும் மஞ்சைப் பை திட்டம், பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.

    முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சங்கீதா இன்பம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை வணிகவியல் உதவிப்பேராசிரியர் சரஸ்வதி செய்திருந்தார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நன்றி கூறினார்.

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் "இந்திய கப்பற்படை அதிகாரிக்கான நுழைவு வாயில்" என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர், பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    லெப்டினன்ட் கிருஷ்ணன், இந்திய கப்பல் படையில் பணி அனுபவங்கள் குறித்தும், பணி நியமன முறை குறித்தும், ஊதிய வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தேசிய மாணவர் படை அதிகாரி கணேஷ்பாபு நன்றி கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் 800 பேர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக இசை தினம்- கலை விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் சார்பாக வருகின்ற 18-ந் தேதி அன்று மாலை 4.00 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் "தமிழ்நாடு நாள்" மற்றும் உலக இசை தினம்- கலை விழா நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மதுரை அகில இந்திய வானொலி நிலைய குரலிசை கலைஞர் பாலாமணி ஈஸ்வர் டி.வி.ராமா னுஜாசாருலு ஆகியோ ரின் குரலிசை நிகழ்ச்சியும், மதுரை அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை இசை நிகழ்ச்சி, கலைமாமணி ஆத்தூர் கோமதி குழுவினர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    • முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை,பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக நெய்தல் கலை விழா நேற்று மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சி, வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்க்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்த ஸ்டால்கள் திறக்கப்பட்டுஇருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பாக முன்பாக ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் நின்று நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் செல்பி ஸ்பாட்டாக அப்பகுதி திகழ்ந்தது.நெய்தல் விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.யுடன் அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    ×