search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெலட்டூரில் நாளை, பாகவத மேளா நாடக விழா தொடக்கம்
    X

    பாகவத மேளா நாடக விழாவின் ஒரு காட்சி.

    மெலட்டூரில் நாளை, பாகவத மேளா நாடக விழா தொடக்கம்

    • 25-ந்தேதி இரவு வள்ளி திருமணம், நாடகமும் நடைபெறவுள்ளது.
    • விழாவில் ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்ச னையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.

    இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாடகம் நடைபெற்றது, நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு களித்தனர்.

    21-ந்தேதி ஹரிச்சந்திரா முதல்பாகமும், 22ந்தேதி ஹரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும்,24 ந்தேதி லீலா விலாசம் எனும் நாடகமும், 25 ந்தேதி இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறவுள்ளது.

    தினசரி பல்லேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது.

    நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×