search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா
    X

    தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா தொடங்கியது
    • மாணவர்கள் தாங்கள் சாதிக்க நினைப்பதை துணிச்சலோடு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் நட்சத்திரா கலைவிழா நேற்று துவங்கியது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-பாடசாலைக் கல்வியானது வகுப்பறைக் கல்வியுடன் நின்று விடக்கூடாது. அது சிந்தனைத்திறன், மொழித்திறன், ஆக்கத்திறன், நடனக் கலைத்திறன் போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

    மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதனையாளர்களாக சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தினைப் பெற வேண்டும்.மாணவர்கள் தாங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தைரியமாகவும், துணிச்சலோடும் செய்யவேண்டும். கலை என்ற சொல் உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் என்றார்.செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், நிவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா கலந்துகொண்டு பேசுகையில், நமக்கான மதிப்பு ஒருவருக்கு புரியவில்லை என்றால் அவர்களை நாம் மதிக்ககூடாது.யாருக்கு பின்னாலும் நாம் செல்லக்கூடாது, சிலர் நம்ம கூட வரவில்லை என்றால் அதற்கான கொடுப்பனை அவர்களுக்கு இல்லை என நினைத்து கொள்ள வேண்டும். எனவே நேரத்தை வீணாடிக்கால் படித்து வாழ்க்கையில் சாதித்து காட்டவேண்டும் என்றார்.

    விழாவில் சினிமா நடிகை இவானா, காமெடியன்கள் மதுரை முத்து, அன்னபாரதி, ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் குழுவினர்கள், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.2 ம் நாளான இன்று (24-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ) சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    மேலும் நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த நட்சத்திர கலை விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×