search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அரசு பள்ளிகளில் பெயரளவிற்கு நடத்தப்பட்ட கலைவிழா - பரிசு பெற்ற ஒரே மாணவி
    X

    கலைவிழாவில் ஒரேஒரு மாணவி  பங்கேற்றதையும் காணலாம்.

    கொடைக்கானல் அரசு பள்ளிகளில் பெயரளவிற்கு நடத்தப்பட்ட கலைவிழா - பரிசு பெற்ற ஒரே மாணவி

    • தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
    • ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெயரளவிற்கு நடத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவி களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மிகுந்த ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெய ரளவிற்கு நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகளின் பங்கேற்பு இல்லாததால் போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டது.

    போதிய பங்கேற்பு இல்லாததால் பங்கு பெற்ற ஒருவருக்கு மட்டுமே பரிசும் வழங்க ப்பட்டது. கொடைக்கானல் வட்டார வள மையம் சார்பில் கடந்த 18ஆம் தேதி மாணவ-மாணவி களுக்கான கலை விழா தொடங்கியது. இந்த கலைவிழா நிகழ்வில் விழா 3 நாட்கள் நடத்தப்பட வேண்டும். முதல் நாளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகளுக்காகவும், அடுத்த நாள் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்காகவும், 3ம் நாள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கும் இந்த கலை விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    கொடைக்கானலில் 21 பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர் . ஆனால் கொடைக்கானலில் நடந்த கலைத்திருவிழாவில் சுமார் 150 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 26 வகையான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதல் நாள் போட்டிகளில் 130 மாணவ- மாணவிகள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். 2ம் நாள் போட்டிகளில் சுமார் 60 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 3ம் நாள் போட்டி நடத்தப்படவே இல்லை. மாணவ-மாணவிகள் பங்கேற்காத காரணத்தினால் 3ம் நாள் போட்டி ரத்து செய்ய ப்பட்டது.

    வட்டார வள மைய பொறுப்பு அலுவலர் சகாய செல்வி என்பவர் இந்த கலைத் திருவிழாவிற்கு பொறுப்பு ஏற்று நடத்தியுள்ளார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினாலும் பெயரளவிற்கு நடத்த ப்பட்டதாலும் கொடை க்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளி க்கொணர முடியாமல் இந்த கலைத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக் கொணர்வதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த அடிப்படை நோக்கத்தை தகர்க்கும் விதமாக கொடைக்கானலில் நடந்த கலை விழா நடந்துள்ளது. கொடைக்கானலில் நடந்த கலை விழா பொறுப்பா ளர்கள் முன் தயாரிப்பு சந்திப்புகளையோ, அல்லது 21 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களையோ சந்திக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல், பெயரளவிற்கு இந்த போட்டிகளை நடத்தியுள்ளனர்.

    இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமலும் பரிசுகள் பெற முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த கலை விழா போட்டிகளை ஒருங்கிணைப்புடன் செய்து மலைவாழ் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×