search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors Strike"

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா இன்று (சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த மசோதாவில் மக்களையும், மருத்துவ துறையையும் பாதிக்க கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதை கண்டித்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இன்று தாக்கல் செய்யப்படும் மசோவை கண்டித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு மத்திய அரசால் தேர்வு செய்யப்படும், 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமி‌ஷன் குழு அமைக்கப்படும்.

    இக்குழுவில் 5 டாக்டர்களும், மருத்துவத் துறையை சாராதவர்களும் இடம் பெறுவர். முன்புள்ள அமைப்பில், மாநிலத்துக்கு பலர் என மொத்தம் 300 பேர் உறுப்பினராக இருந்தனர். மருத்துவம் சாராதவர்கள் மருத்துவமனைகள், டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளை கண்காணிப்பர் என்பது சாத்தியமற்றது.

    இது போன்ற குழுக்களால், தரமற்ற மருத்துவ கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையில் தவறுகள், தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழிவகுக்கும்.

    அலோபதி மருத்துவர்கள் அல்லாத ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதிக் மருத்துவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வழங்கி அலோபதி சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதனால் போலி மருத்துவர்கள் வருவாக வாய்ப்பு உள்ளது.

    மக்களுக்கான சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்படும். எனவே இந்த மசோதாவை கண்டித்து இன்று அகில இந்திய அளவில் ஒரு நாள் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 750-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்று உள்ளன. சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

    இதனால் பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அவசரக்கால அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சம்மந்தமான அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. #DoctorsStrike

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அந்த டாக்டர்கள் அனைவரும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவசர சிகிச்சை, ஆபரே‌ஷன் போன்ற பணிகள் ஆஸ்பத்திரிகளில் நடந்து வருகிறது.

    டாக்டர்களின் இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்திய மருத்துவ அசோசியே‌ஷன் சார்பில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர். #DoctorsStrike

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
    மதுரை:

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 100 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

    வேலை நிறுத்தம் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற அதிகளவில் வந்திருந்ததை காண முடிந்தது. #tamilnews
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #IndianMedicalAssociation #DoctorsStrike
    திருச்சி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 44 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 32 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் பணியாற்றும் 1500 டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து முன்னாள் மாநில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் குணசேகரன், மாநில துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் கூறியதாவது :-

    மருத்துவ உலகின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் இந்த ஆணையத்தில் உள்ள 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மற்றவர்கள் நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

    அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்காது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத நிர்வாக ஒதுக்கீடு 50 சதவீதமாக உயரும். அதற்கான கட்டணத்தை தனியார் மருத்துவ கல்லூரியே நியமிப்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மாற்றுமுறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்திற்கு எதிரானது. எனவே தான் இந்த ஆணையத்தை கைவிட வலியுறுத்துகிறோம்.

    மத்திய அரசு கைவிடவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #IndianMedicalAssociation #DoctorsStrike
    நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    நெல்லை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ செய்தனர். தமிழகத்திலும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் புறநகரில் உள்ள 400 ஆஸ்பத்திரிகளிலும், மாநகரில் உள்ள 100 ஆஸ்பத்திரிகளிலும் இன்று டாக்டர்கள் சாதாரண சிகிச்சைகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதனால் அனைத்து தனியார் ஆஸ்பத்திரியிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பல கிளினிக்குகள் இன்று பகல் மூடப்பட்டு இருந்தது. பிரபல கண் ஆஸ்பத்திரிகளும் இன்று மூடப்பட்டது.

    ஆனால் பெரிய ஆஸ்பத்திரியில் தங்கி உள்ள நோயாளிகளுக்கும், மகப்பேறு சிகிச்சையும், அவசர சிகிச்சையும் பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து நடந்தது. இன்று இரவு 6 மணிக்கு மேல் சாதாரண சிகிச்சைகள் நடத்தப்படும் என்றும் தனியார் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளான டாக்டர்கள் ஆதம்அலி, அன்பு ராஜன், பிரேம சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். #IndianMedicalAssociation  #Doctorsstrike

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    ராமநாதபுரம்:

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வது, ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து வருகிறது.

    மேலும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்தது.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 70 தனியார் மருத்தவமனைகளிலும் 220 மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மாவட்ட மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் கலீல் ரகுமான் கூறுகையில், உள்நோயாளிகள் மற்றும் பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.

    வெளி நோயாளிகளுக்கு மட்டும் மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்றார்.

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வெளியூர் மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    தமிழகம் முழுவதும் நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. #IndianMedicalAssociation
    நாகர்கோவில்:

    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இச்சட்டத்தை கைவிடக்கோரி இந்திய மருத்துவர் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அதன்படி, நாளை (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். 34 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை நடைபெறும் போராட்டத்தின் போது உள்நோயாளிகளை தவிர புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது.

    அவசர கால சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படும். அவசரமில்லாத ஆபரேசன்கள் நடைபெறாது. நாளை காலை 9 மணிக்கு இந்திய மருத்துவர் சங்க கிளைகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IndianMedicalAssociation
    சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக நேற்று 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவர், தனது மனைவியின் கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மகப்பேறு பிரிவில் பணியில் இருந்த டாக்டர் பவானிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயக்குமார், அந்த பெண் டாக்டரை செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை முகநூல், ‘வாட்ஸ் அப்’ போன்றவற்றில் பதிவேற்றம் செய்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர் பவானி கொடுத்த புகாரின் பேரில் விஜயக்குமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளத்தில் டாக்டர் பவானிக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த 10 நபர்களையாவது போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    டாக்டர் பவானி, தனது கணவர் சூரியபிரகாசுடன் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள செல்வாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்தினால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக நேற்று காலை திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்த மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவமனை டீன் நடராஜன் மற்றும் முதுநிலை டாக்டர்கள் முன்னிலையில் பவானியின் கணவர் டாக்டர் சூரியபிரகாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மருத்துவ கல்விஇயக்குனர், போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
    ×