search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai private hospital"

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மனநலம் பாதிக்கப்பட்ட கால்நடை டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவ ராமகிருஷ்ணன் (வயது57), கால்நடை டாக்டர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட இவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
    மதுரை:

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 100 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

    வேலை நிறுத்தம் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற அதிகளவில் வந்திருந்ததை காண முடிந்தது. #tamilnews
    ×