என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் கால்நடை டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை
    X

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் கால்நடை டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை

    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மனநலம் பாதிக்கப்பட்ட கால்நடை டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவ ராமகிருஷ்ணன் (வயது57), கால்நடை டாக்டர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட இவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×