search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Medical Commission Bill"

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அந்த டாக்டர்கள் அனைவரும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவசர சிகிச்சை, ஆபரே‌ஷன் போன்ற பணிகள் ஆஸ்பத்திரிகளில் நடந்து வருகிறது.

    டாக்டர்களின் இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்திய மருத்துவ அசோசியே‌ஷன் சார்பில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர். #DoctorsStrike

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #IndianMedicalAssociation #DoctorsStrike
    திருச்சி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 44 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 32 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் பணியாற்றும் 1500 டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து முன்னாள் மாநில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் குணசேகரன், மாநில துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் கூறியதாவது :-

    மருத்துவ உலகின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் இந்த ஆணையத்தில் உள்ள 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மற்றவர்கள் நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

    அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்காது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத நிர்வாக ஒதுக்கீடு 50 சதவீதமாக உயரும். அதற்கான கட்டணத்தை தனியார் மருத்துவ கல்லூரியே நியமிப்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மாற்றுமுறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்திற்கு எதிரானது. எனவே தான் இந்த ஆணையத்தை கைவிட வலியுறுத்துகிறோம்.

    மத்திய அரசு கைவிடவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #IndianMedicalAssociation #DoctorsStrike
    தமிழகம் முழுவதும் நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. #IndianMedicalAssociation
    நாகர்கோவில்:

    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இச்சட்டத்தை கைவிடக்கோரி இந்திய மருத்துவர் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அதன்படி, நாளை (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். 34 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை நடைபெறும் போராட்டத்தின் போது உள்நோயாளிகளை தவிர புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது.

    அவசர கால சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படும். அவசரமில்லாத ஆபரேசன்கள் நடைபெறாது. நாளை காலை 9 மணிக்கு இந்திய மருத்துவர் சங்க கிளைகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IndianMedicalAssociation
    ×