search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul dragons"

    டி.என்.பி.எல். தொடரில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ்சுடன் மோதும் கோவை கிங்ஸ் அணி 2-வது வெற்றி பெறுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018
    நத்தம்:

    3-வது தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இன்று நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இப்போட்டி நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. திண்டுக்கல் தொடக்க ஆட்டத்தில் திருச்சியிடம் தோற்றது.

    2-வது ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின், ஹரி நிஷாந்த், ஜெகதீசன், விவேக், சீத்தாராம், முகமது, ஆத்தியா அருண் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    கோவை கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    அபினவ் முகுந்த், ஷாருக்கான், அந்தோணிதாஸ், அகில் ஸ்ரீநாத், வெங்கட்ராமன், நடராஜன், விக்னேஷ் போன்ற வீரர்கள் உள்ளனர். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL #SMPvDD
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 24 ரன்களும், தலைவன் சற்குணம் 26 ரன்களும், அருண் கார்த்திக் 61 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஷிஜித் சந்திரன் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

    திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. ஹரி நிஷாந்தும், ஜகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஹரி நிஷாந்த் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் ஜகதீசனுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஜகதீசன் 42 பந்துகளில் 68 ரன்களும், விவேக் 33 பந்துகளில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணிக்கு மதுரை பாந்தர்ஸ் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #TNPL #SMPvDD
    தழிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கேதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவன் சற்குணம் 26 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் அருண் கார்த்திக் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.



    ஷிஜித் சந்திரன் 20 பந்தில் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றனர். #NammaOoruNammaGethu #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #NammaOoruNammaGethu #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசனின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #TNPL
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினார்.

    கேப்டன் அஸ்வின் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 



    இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி அணி களமிறங்கியது. பாரத் சங்கர், பாபா இந்திரஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இந்திரஜித் 14 ரன்களிலும், அரவிந்த் 19 ரன்களிலும், கணபதி 5 ரன்னிலும் மணி பாரதி 3 ரன்னிலும் அவுட்டாகினர். பாரத் சங்கர் 39 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் செல்வம் சுரேஷ் குமார் பொறுப்பாக ஆடினார். அவர் இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை செல்வம் சுரேஷ்குமார் வென்றார். #TNPL #RubyTrichyWarriors #DindugulDragons
    தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசனின் முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ்க்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நிஷாந்த் உடன் ஆர் ரோகித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினாலும், கேப்டன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். அவர் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி அணி பேட்டிங் செய்து வருகிறது.
    8 அணிகள் இடையிலான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நெல்லையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லீக் ஆட்டங்களும் (பிற்பகல் 3.15, இரவு 7.15 மணி), மற்ற நாட்களில் ஒரு லீக் ஆட்டமும் (இரவு 7.15 மணி) நடைபெறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு பெரும்பாலான வீரர்கள் அணி மாறி இருக்கிறார்கள். அதனால் எந்த அணி வலுவானது என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தாயகம் திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை டி.என்.பி.எல். தொடரில் நீடிப்பார்.

    காரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக தவற விடுவார்.

    டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி எடுப்பதுடன், பேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

    தொடக்க விழா முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    தொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #TNPL2018
    நெல்லை:

    டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்டிரியாட்ஸ் (தூத்துக்குடி) அணி அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சீசெம்மதுரை பாந்தர்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை இந்த முறை புதிய உரிமையாளர்கள் வாங்கி இருப்பதால் அதன் பெயர்களை மாற்றி உள்ளனர். அதன்படி ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் வி.பி.காஞ்சி வீரன்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. நெல்லை, திண்டுக்கல்லில் (நத்தம்) தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 போட்டிகளும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரண்டு போட்டிகளும் (மாலை 3.15, இரவு 7.15) மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டமும் (இரவு 7.15) நடைபெறும்.

    ஆகஸ்டு 5-ந் தேதி வரை ‘லீக்’ ஆட்டம் நடைபெறும். 7-ந் தேதி ‘பிளே ஆப்’ சுற்று தொடங்குகிறது. ‘தகுதி சுற்று1’ ஆட்டம் (குவாலிபையர்1) நெல்லையிலும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) மற்றும் தகுதி சுற்று-2 (குவாலி பையர் 2) ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

    முதல் 2 சீசனிலும் ஒவ்வொரு அணியிலும் விளையாடிய வீரர்கள் இந்த சீசனில் வேறு அணிக்காக ஆடுகிறார்கள். 3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட்டனர். இதனால் முதல் 2 போட்டியை விட இந்த சீசன் போட்டி அதை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களதுதிறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடுவார்கள்.

    3-வது டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் என மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (புதன் கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.



    முன்னதாக தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது. 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை எதிர் கொள்கிறது. அந்த ஆட்டம் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டிகள் அனைத்தும் ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1’ சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NammaOoruNammaGethu #TNPL2018
    ×