search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரூபி திருச்சி வாரியர்ஸ்
    X

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரூபி திருச்சி வாரியர்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசனின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #TNPL
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினார்.

    கேப்டன் அஸ்வின் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 



    இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி அணி களமிறங்கியது. பாரத் சங்கர், பாபா இந்திரஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இந்திரஜித் 14 ரன்களிலும், அரவிந்த் 19 ரன்களிலும், கணபதி 5 ரன்னிலும் மணி பாரதி 3 ரன்னிலும் அவுட்டாகினர். பாரத் சங்கர் 39 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் செல்வம் சுரேஷ் குமார் பொறுப்பாக ஆடினார். அவர் இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை செல்வம் சுரேஷ்குமார் வென்றார். #TNPL #RubyTrichyWarriors #DindugulDragons
    Next Story
    ×