search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies"

    • தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது45). கூலி ெதாழிலாளி. இவருக்கும் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஆனந்த வள்ளி இறந்து போனார். மனைவி இறந்ததால் சோகத்துக்குள்ளான ராஜாராம் மது பழக்கத்துக்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.

    அதுபோல் நேற்று ராஜாராம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் அவர் தவறி விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் ராஜாராம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலமோகன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை

    • ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்து தாய்,மகன் சாவு
    • தந்தை உயிருக்கு போராட்டம்

    திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருக்கு சிவகாமி (60) என்ற மனைவியும் செந்தில், தினேஷ் (வயது36) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    மூத்த மகன் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இருந்த போதிலும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

    நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன்தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.

    • கரூர் பசுபதிபாளையம்கிணற்றில் குதித்த வாலிபர் சாவு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கரூர்,  

    கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). தனியார் நிறுவன ஊழியர்.

    இவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது மேலேயிருந்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். மது போதையில் இருந்ததால் அவரால் நீந்த முடியாமல் மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் திடீர் சாவு
    • லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,வீரியபாளையம் ஊராட்சி, வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 38).கூலித்தொழிலாளி, இவரது மகள் திவ்யா பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திவ்யாவுக்கு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வீட்டில் வலிப்பு நோயால் துடித்துள்ளார். உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • புகளூர் அருகேவாய்க்காலுக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
    • இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

     வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்( வயது 41). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா (26) .இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் பிரகாசம் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணி அளவில் முத்தனூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி புகளூர் வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பிரகாசம் புகளூர் வாய்க்காலுக்குள் விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த வாய்க்காலுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது முனி நாதபுரம் முனியப்ப சாமி கோவில் அருகே கட்டிடத்தில் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் ஒரு மணியளவில் பிரகாசத்தின் உடலை மீட்டு வேலாயுதம் பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • புளியம்பட்டியில் வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து உயிலம்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் முருகே சன் மகன் தீபக்குமார் (வயது 24). இவர் சம்ப வத்தன்று நம்பியூர் ரோடு காந்திநகர் பகுதியில் இவரது அப்பா வைத்திருக்கும் பிளாஸ்டிக் கம்பெ னியில் இருந்து தன்னு டைய இருச க்கர வாகனத்தில் புளியம்ப ட்டி நோக்கி வந்து கொண்டி ருந்தார்.அப்போது அவர் காந்தி நகர் மாகாளியம்மன் கோவில் அருகே வரும்போது நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேரு ந்து திடீரென எதிர்பாராத விதமாக தீபக் குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீச ப்பட்டார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு தீபக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும் இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • செக்யூரிட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்த கங்காபுரம் மேற்கு தயிர்பாளையம் கானாகாடு காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 37). இவர் நசியனூரில் உள்ள மஞ்சள் குடோன் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். துரைசாமி சம்பவத்தன்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். இதை ப்பார்த்த அக்கம்பக்க த்தினர் அவரை மீட்டு பெரு ந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்து வர்கள் பரிசோதித்து விட்டு துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து துரைசாமியின் மனைவி சசிகலா சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நபர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
    • போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.

    திருச்சி, 

    திருச்சி அரசு மருத்துவம னையில் 40 வயது மதிக்க த்தக்க ஆண் நபர் ஒருவர் கடந்த 26-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெ பறுவதற்கு வந்துள்ளார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரை உள் நோயாளியாக அனுமதித்த சிகிச்சை அளித்தனர்.

    அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் திடீரென்று இவர் இறந்து விட்டார். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியாததால், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கண்டோன்மெ ண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விரை ந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.

    பின்னர் கண்டோன்மெ ண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் டோல்கேட் பகு தியை சோந்த அந்தோணி சாமி என்பவரின் மகன் எபினேசர் (வயது 40) என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு ந்தார் என்று தெரிய வந்தது.

    மேலும் இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    • தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குசேலன்(வயது67). இவருக்கு உதயசுந்தரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த 3 நாட்களாக குலேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குலேசன் வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை குசேலன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி உதயசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் புதுவை நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் கேஷியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே பாஸ்கரனுக்கு நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக வீட்டிலேயே மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்றுஅதிகாலை பாஸ்கரன் வீட்டின் படுக்கையில் மயங்கி கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.
    • குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் வி.சி.பி. குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் 3 மகள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    ஏழுமலை விழுப்புரம்- வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இதற்கிடையே ஏழுமலைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.

     ஏழுமலை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆனந்தி நள்ளிரவில் கணவரை தேடி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள பெரிய வாய்க்காலில் ஏழுமலை தலைகுப்புற தண்ணீரில் விழுந்து கிடப்பதை கண்டு ஆனந்தி அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரைமீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஏழுமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மதுகுடித்து விட்டு ஏழுமலை வீடு திரும்பிய போது குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 55) நரிக்குறவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிதம்பரம் கீதைப்பாளையம் பகுதியில் தொழில் செய்ய சென்றள்ளார்.

    அப்போது தாய்தந்தை இல்லாத 5 வயதுடைய சுரேஷ் என்ற சிறுவனை கண்டு, தன்னுடனேயை அழைத்து வந்து வளர்த்து வந்தார். தற்போது 22 வயதான சுரேஷ் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

    இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமானது. உடனே அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவ மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
    • நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    டால்மியாபுரம், 

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

    இவர் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபு ரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    இப்பகுதியில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், அன்னாள் ஜெயமேரி நேற்று மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்து கேட்டு க்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ெஜயமேரி இறந்துவிட்டதாக கூறினர்.

    இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுபோன்று புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் பல்வேறு ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×