search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகிச்சை பெற வந்த நபர் சாவுயார் அவர்? போலீசார் விசாரணை
    X

    சிகிச்சை பெற வந்த நபர் சாவுயார் அவர்? போலீசார் விசாரணை

    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நபர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
    • போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.

    திருச்சி,

    திருச்சி அரசு மருத்துவம னையில் 40 வயது மதிக்க த்தக்க ஆண் நபர் ஒருவர் கடந்த 26-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெ பறுவதற்கு வந்துள்ளார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரை உள் நோயாளியாக அனுமதித்த சிகிச்சை அளித்தனர்.

    அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் திடீரென்று இவர் இறந்து விட்டார். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியாததால், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கண்டோன்மெ ண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விரை ந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.

    பின்னர் கண்டோன்மெ ண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் டோல்கேட் பகு தியை சோந்த அந்தோணி சாமி என்பவரின் மகன் எபினேசர் (வயது 40) என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு ந்தார் என்று தெரிய வந்தது.

    மேலும் இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×