search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்த செக்யூரிட்டி சாவு
    X

    மயங்கி விழுந்த செக்யூரிட்டி சாவு

    • செக்யூரிட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்த கங்காபுரம் மேற்கு தயிர்பாளையம் கானாகாடு காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 37). இவர் நசியனூரில் உள்ள மஞ்சள் குடோன் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். துரைசாமி சம்பவத்தன்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். இதை ப்பார்த்த அக்கம்பக்க த்தினர் அவரை மீட்டு பெரு ந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்து வர்கள் பரிசோதித்து விட்டு துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து துரைசாமியின் மனைவி சசிகலா சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×