என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து தாய்,மகன் சாவு
- ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்து தாய்,மகன் சாவு
- தந்தை உயிருக்கு போராட்டம்
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருக்கு சிவகாமி (60) என்ற மனைவியும் செந்தில், தினேஷ் (வயது36) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இருந்த போதிலும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.
நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன்தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்