என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து வியாபாரி சாவு
- தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.
- குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் வி.சி.பி. குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் 3 மகள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
ஏழுமலை விழுப்புரம்- வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இதற்கிடையே ஏழுமலைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.
ஏழுமலை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆனந்தி நள்ளிரவில் கணவரை தேடி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள பெரிய வாய்க்காலில் ஏழுமலை தலைகுப்புற தண்ணீரில் விழுந்து கிடப்பதை கண்டு ஆனந்தி அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரைமீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஏழுமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மதுகுடித்து விட்டு ஏழுமலை வீடு திரும்பிய போது குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்