search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கழிவறையில் தவறி விழுந்த முதியவர் சாவு
    X

    கோப்பு படம்.

    கழிவறையில் தவறி விழுந்த முதியவர் சாவு

    • தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குசேலன்(வயது67). இவருக்கு உதயசுந்தரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த 3 நாட்களாக குலேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குலேசன் வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை குசேலன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி உதயசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் புதுவை நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் கேஷியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே பாஸ்கரனுக்கு நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக வீட்டிலேயே மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்றுஅதிகாலை பாஸ்கரன் வீட்டின் படுக்கையில் மயங்கி கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×