என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "debt troublesome"
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (வயது27). இவரது மனைவி சேர்மக்கனி.
விவசாயிகளிடம் நெல் மூடைகளை வாங்கி அதனை வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் சுரேஷ்கண்ணன் விற்று வந்தார். கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுரேஷ் கண்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். நேற்று ராஜபாளையம் அருகே மீனாட்சியாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவர் இரவில் அங்கு தங்கினார்.
காலையில் உறவினர்கள் சுரேஷ்கண்ணன் தங்கிய அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி சேர்மக்கனி கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மாதவரம்:
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு சாரங்கபாணி நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது மனைவி இந்திராணி (வயது 50). இவர்களது மகன் தியாகராஜன் (25). போரூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பிரித்விராஜ் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அவர் இறந்துவிட்டதால் வங்கி கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு இந்திராணி தள்ளப்பட்டார். ஆனால் அவரால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்த இந்தி ராணி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் வேலை முடிந்து மகன் தியாகராஜன் இரவில் வீடு திரும்பினார். மின் விசிறியில் தாயார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயின் பிணத்தை கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்தார். தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதே மின் விசிறியில் தியாகராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இந்திராணியின் மகள் உமா தாயாருக்கும், தம்பிக்கும் போன் செய்து பார்த்தார். அவர்கள் போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து விசாரித்தார். அவர்கள் வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.
போலீசார் அங்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் தாய்-மகன் இருவரும் பிணமாக கிடந்தனர். இருவரது பிணத்தையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் அருள் முருகன். மாதவரம் பால் பண்ணை பவானி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (18). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் என் ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் சரியாக படிக்க வில்லை என்றதால் தந்தை அருள் முருகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிஷேக் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
உறுவையாறு பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் கார்த்திகேயன் (வயது 58). தனியார் கம்பெனி ஊழியர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பாலமுருகன் ஐ.ஆர். பி.என். போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் இருப்பதால் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வீட்டு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.
மகன் பாலமுருகன் வீட்டுக்கு வந்து தந்தையை தேடினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).
இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.
தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.
ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த விஷத்தை குடித்தனர்.
முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் விஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.
அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.
பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் விஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.
உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.
நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் எல். ஐ.சி. காலனி அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவரது மனைவி லீலா (55). இவர்களுக்கு ராஜேஷ் (21) என்ற மகன் உள்ளார்.
வெங்கடேசன் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ராஜேஷ் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார்.
வெங்கடேசன் பிரபல வங்கியில் வீடு கட்டி விற்கும் தொழிலுக்காக ரூ.1½ கோடி வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கி மந்தமாக உள்ளதால் வங்கிக்கு பணம் செலுத்த முடியவில்லை.
கடந்த ஒரு வருடமாக வெங்கடேசன் பண கஷ்டத்தில் இருந்து உள்ளார். பணத்தை திருப்பி செலுத்தாததால் வங்கியில் இருந்து அவருக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசன் மனைவி லீலாவிடம் கடன் தொல்லையை கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.
மகன் ராஜேஷ் சென்னையில் இருந்ததால் அவரை திருச்சிக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். திங்கட்கிழமை பழனி கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கூறி வரவழைத்துள்ளனர்.
உடனே ராஜேஷ் ரெயில் மூலம் நேற்று மாலை புறப்பட்டு திருச்சி வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணிக்கு தந்தையுடன் செல்போனில் ராஜேஷ் பேசினார். அப்போது ராஜேஷை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும்படி வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இதனால் ரெயிலை விட்டு இறங்கியதும் ராஜேஷ் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது திருச்சியில் இறங்கி விட்ட தகவலை தந்தையிடம் தெரிவிக்க அவரை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றார். அப்போது கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டு அறையில் தந்தை வெங்கடேசனும், தாய் லீலாவும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
ராஜேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
வெங்கடேசன், லீலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு முதலில் வெங்கடேசன், லீலா தம்பதியினர் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர். எனவே தான் அவரை பழனி கோவிலுக்கு போக வேண்டும் என ஏமாற்றி உடனே வரவழைத்துள்ளனர்.
ஆனால் அதன் பிறகு ஒரே மகனான ராஜேஷின் வாழ்க்கையை தாங்களே அழிக்க நினைக்க கூடாது என நினைத்து அவர் வருவதற்குள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சினை குறித்து தனது தந்தை தன்னிடம் கூறாமல் விபரீத முடிவை எடுத்து விட்டார் என கூறி ராஜேஷ் கதறி அழுதது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடைய கடன் பிரச்சினை தொடர்பாக தொழிலதிபர் வெங்கடேசனை நேரில் யாரும் மிரட்டினார்களா? என அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமும் செல்போனில் பேசி மிரட்டிய வங்கி ஊழியர்கள் யார் என போனில் உள்ள அழைப்புகள் மூலமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்