search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman suicide"

    அகமதாபாத்தில் முன்னாள் காதலியின் ஆவி தன்னை இயக்குவதாக கூறிய தொழில் அதிபர் மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணால் திரிவேதி (வயது 45). அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி கவிதா (45), மகள் ஷிரீன் (16), தாயார் ஜெயஸ்ரீ பென் (75) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

    அவரது உறவினர்கள் திரிவேதிக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாக ரிங் கொடுத்தும் போனை எடுக்கவில்லை.

    எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குணால் திரிவேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி கவிதா, மகள் ஷிரீன் ஆகியோர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். தாயார் ஜெயஸ்ரீபென் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுபற்றி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீபென் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வி‌ஷத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

    இந்த சம்பவத்துக்கு காரணம் என்ற என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணால் திரிவேதி எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன.

    அதில், தன்னை இறந்து போன முன்னாள் காதலியின் ஆவி இயக்குவதாகவும், அதனால்தான் குடிகாரனாக மாறி விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொரு கடிதத்தில் காதலியின் ஆவி ஏவுவதால் குடும்பத்தினரை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விட்டு கடவுளிடம் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    இந்த சாவுக்கு கடன் பிரச்சினையோ, மற்ற வி‌ஷயங்களோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    தனது மூட நம்பிக்கையால் குணால் திரிவேதி குடும்பத்தையே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. #tamilnews
    ராஜபாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (வயது27). இவரது மனைவி சேர்மக்கனி.

    விவசாயிகளிடம் நெல் மூடைகளை வாங்கி அதனை வியாபாரிகளுக்கு கமி‌ஷன் அடிப்படையில் சுரேஷ்கண்ணன் விற்று வந்தார். கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுரேஷ் கண்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். நேற்று ராஜபாளையம் அருகே மீனாட்சியாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவர் இரவில் அங்கு தங்கினார்.

    காலையில் உறவினர்கள் சுரேஷ்கண்ணன் தங்கிய அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மனைவி சேர்மக்கனி கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் தொழிலதிபர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் புதுக்கோட்டையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று கணேசன் அவரது மகளுக்கு போன் செய்தார். அப்போது தான் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று, கணேசனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடும்ப தகராறில் கணேசன் தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×