search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curfew"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
    • இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.

    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.
    • ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டிருந்தது. பொதுமக்களும் முக கவசம் அணியாமல் சகஜ நிலையில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா ஜூன் மாதம் மீண்டும் பரவுவது அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதனால் முக கவசம் அணிய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

    கொரோனா பரிசோதனையையும் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று 29 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா பரவியது கண்டறியப்பட்டது.

    அந்த வகையில் 137 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 909 பேர், செங்கல்பட்டில் 352 பேர், திருவள்ளூரில் 100 பேர், கோவையில் 96 பேர், காஞ்சிபுரத்தில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. நேற்றைய நிலவரப்படி 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 745 பேரும், செங்கல்பட்டில் 1,923 பேரும், கோவையில் 693 பேரும், திருவள்ளூரில் 627 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் முக கவசம் அணியுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து பல பகுதிகளில் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.

    ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது அரசின் சார்பில் பின்னர் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

    பிஜீங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன.

    மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத நிலையை உருவாக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று சீன அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது. ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு விலக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் மூலம் மற்ற அனைவருக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது.

    இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் பிஜீங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கி றது. இதனால் பிஜீங்கில் மீண்டும் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.


    • ஹவுரா மாவட்டத்தில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது.
    • இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

    நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், நுபுர் சர்மாவை கைது செய்த கோரி மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபெரியா பகுதியில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

    இந்நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளை வரவழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதனிடையே, ஹவுரா மாவட்டத்தின் பன்ஹாரிஷ்பூர் உள்பட பதற்றம் நிறைந்த பகுதிகளில் வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பல்வேறு பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் 11 காவலர்களும், 12 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதையடுத்து ராஞ்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை நடத்தினார்.

    போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

    புதிய வகை கொரோனா பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3.45 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 4.67 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

    பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்டதை தேசிய தொற்று நோய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. உருமாறிய புதிய வகை வைரஸ் ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படுகிறது.

    உலக சுகாதாரஅமைப்பு இந்த புதிய வகையான ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போட்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளது.

    மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது.

    விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    அரசின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

    மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகள், மருத்துவர்கள், நிபுணர்கள் புதிய வைரஸ் குறித்து தெரிவித்த ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    விமான சேவைக்கு தடை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விமான பயணத்துக்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இந்தியாவுக்கு வந்த பின் பரிசோதனையை தீவிரப்படுத்துதல் குறித்தும் பேசப்பட்டது.

    ஆங்காங், இஸ்ரேலில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தடுப்பூசி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2-வது டோஸ் செலுத்துவதில் பல்வேறு மாநிலங்களில் மந்தநிலை காணப்படுகிறது. இதை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே புதிய வகை கொரோனா பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படியுங்கள்... பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல்

    கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 181 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தமிழகத்தில் தற்போது 8,418 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 23 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,418 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,258 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    கொரோனா பரிசோதனை


    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 759 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,443 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 ஆயிரத்து 367 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். 75 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
    வெல்லிங்டன்:

    கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் இதனை அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “கொரோனா தொற்றில் இருந்து நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருத்தக நாம் எடுத்த முதல் தீர்க்கமான நடவடிக்கை நமது எல்லைகளை மூடுவது. அதே போல் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவதில் நமது கடைசி நடவடிக்கை எல்லைகளை திறப்பது ஆகும்” என்றார்.

    மேலும் அவர் “ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முழுயைாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் நியூசிலாந்து வரலாம். அதே போல் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30-ந்தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என கூறினார்.

    மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குழந்தைகளின் அனைத்து விதமான நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு எப்போதுமே சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது.

    கொரோனா  வைரஸ்


    மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டாக்டர் ஜெமிலா ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி


    நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும். டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×