search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதய்பூர் டெய்லர் கொலை"

    • முன்தைய விசாரணையில் 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

    நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது மொஹ்சின், வாசிம் அலி மற்றும் ஃபர்ஹாத் முகமது ஷேக் ஆகியோரை வெவ்வேறு தேதிகளில் என்ஐஏ கைது செய்தது. 7 குற்றவாளிகளும் ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
    • இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.

    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மம்தா தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " எதுவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    ×