search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udaipur Tailor murder"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
    • இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.

    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • தாலிபானிச மனப்பான்மையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
    • எந்த மதமும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதில்லை.

    ஜெய்ப்பூர்:

    உதய்பூரில் தையல்காரர் கண்கையா லால் இரண்டு நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக அஜ்மீர் தர்கா தீவான் ஜைனுல் அபேதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    எந்த மதமும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதில்லை என்றும், இஸ்லாம் மதத்தில், அனைத்து போதனைகளும் அமைதிக்கான ஆதாரங்களாக செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நமது தாய்நாட்டில் தாலிபானிச மனப்பான்மையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் ஜமியத் உலமா-இ-ஹிந்த் பொதுச்செயலாளர் மௌலானா ஹக்கிமுதீன் காஸ்மியும் உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    இது நாட்டின் சட்டத்துக்கும் நமது மதத்துக்கும் எதிரானது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

    ×