search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "credit"

    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
    • தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.

    முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.

    தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தென்தாமரைகுளம்:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (வயது 36) மீனவர். இவரது மனைவி சகாய சிந்துஜா (32). இந்த தம்பதியின் 4 வயது மகன் ரெய்னா.

    நேற்று காலை சிறுவன் ரெய்னா தனது வீடு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து அவனை பெற்றோர் தேடியபோது அவன் மாயமாகி இருந்தான். இதனால் அக்கம், பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி (38)என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்ததாகவும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் ரெய்னாவை அழைத்துக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செல்போன் மூலம் அந்தோணிசாமியை தொடர்பு கொண்டனர். மேலும் அவரது வீட்டிற்கு தேடிச் சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம், பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தபோதும் அந்தோணிசாமி மற்றும் மாயமான ரெய்னா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசில் ஆரோக்கிய கெபின்ராஜ் புகார் செய்தார்.

    அந்தோணிசாமியிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை உடனே திருப்பிக் கேட்டு அவர் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும், இதனால் தனது மகன் ரெய்னாவை அந்தோணிசாமி கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

    உடனே போலீசாரும் அந்தோணிசாமியின் செல்போன் டவர் மூலம் விசாரணையை தொடங்கினார்கள். அந்தோணிசாமி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பதாக செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. உடனடியாக கன்னியாகுமரி போலீசார் பாலக்காடு விரைந்தனர். அங்கு வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் அவருடன் சிறுவன் ரெய்னா இல்லை. இதனால் போலீசார், ரெய்னா பற்றி அந்தோணிசாமியிடம் விசாரித்த போது அவன் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டு ஆரோக்கிய கெபின்ராஜிடம், அந்தோணிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்றும் அவர் ஆரோக்கிய கெபின்ராஜ் வீட்டுக்கு சென்று கடன் பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியே சென்ற அந்தோணிசாமி வீடு அருகே விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ரெய்னாவை பார்த்து உள்ளார். உடனே அவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழ மணக்குடி-முகிலன் குடியிருப்பு இடையே உள்ள கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்.

    அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ரெய்னாவை மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார். கடனை திருப்பித்தராத ஆரோக்கிய கெபின்ராஜை பழிவாங்குவதற்காக இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அந்தோணிசாமி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவன் ரெய்னா கொலை செய்யப்பட்ட தென்னந்தோப்பு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த தகவலை தென்தாமரை குளம் போலீசாருக்கு கன்னியாகுமரி போலீசார் தெரிவித்தனர்.

    தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் கொலை நடந்த தென்னந்தோப்புக்கு விரைந்தனர். அங்கு உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்த போது அதில் சிறுவன் ரெய்னா பிணமாக மிதந்தது தெரிய வந்தது. ரெய்னாவின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. போலீசார் ரெய்னாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கேரளாவில் கைது செய்யப்பட்ட அந்தோணி சாமியை போலீசார் கன்னியாகுமரி கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வில்லியனூர் அருகே பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே பேரணை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது45). இவர் வில்லியனுர் அருகே கூனிமுடகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பக்கிரிபாளையத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான ஜெயராமன் (27), சீத்தாராமன் (25) ஆகியோர் ஏற்கனவே பணம் கடன் வாங்கி இருந்தனர்.

    அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காத நிலையில் நேற்று பெட்ரோல் பங்கில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் ரூ.500 கடன் கேட்டனர். ஆனால் தமிழ்செல்வன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன்-சீத்தாராமன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்செல்வத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தமிழ்செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயராமன்- சீத்தாராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரியுமா? நாம் நமது தேவைக்கு ஏற்ற தனிநபர் கடனைப் பெற்று பயனடையலாம். அது பற்றி...

    திருவிழாக் கடன்:

    விழாக்கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அதிகபட்சத் தொகை தேவைப்படாது என்பதால் இக்கடன் அளவு, ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவுதான்.

    இதற்கான கால அளவு ஓராண்டு ஆகும். வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இக்கடனில் குறைந்தபட்சத் தொகை ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சத் தொகை ரூ. 50 ஆயிரமும் ஆகும். 2 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமும், 3 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

    வீடு புதுப்பிப்பதற்கான கடன்:

    வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. இதிலுள்ள முக்கியமான அனுகூலம், இக்கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வரை வரிவிலக்கு வழங்கப்படுவதாகும்.

    வீட்டைப் புதுப்பிக்கப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகள், இதற்கான வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். முன்தவணைக் கட்டணம் கிடையாது.

    நிரந்தர விகிதக் கடன்:

    பெயருக்கு ஏற்ப, இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு இதன் முழுக் கால அளவுக்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கிய அனுகூலம், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

    இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



    நுகர்வோர் நீடிப்பு கடன்:

    வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.

    இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

    திருமணக் கடன்:

    ஒவ்வொருவர் வாழ்விலும் பெரிய செலவுகளில் ஒன்று, திருமணச் செலவு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு திருமணக் கடன் கைகொடுக்கிறது.

    இக்கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு, ஒன்று முதல் 5 ஆண்டுகள். வட்டிவிகிதம் 10.5 சதவீதம் முதல். குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். கடன் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாக இருக்கும்.

    விடுமுறை காலக் கடன்:

    விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறையச் செலவாகும். அதற்கு விடுமுறை காலக் கடன் உதவும். இக்கடன் வட்டி விகிதம் அதிகம் என்றபோதும், சம்பள உயர்வு அல்லது போனஸை பயன்படுத்தி கடனை விரைவில் அடைத்துவிடலாம். இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

    விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

    தொழில் கடன்:

    புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். நமது தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள். வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும்.

    இக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
    ×