search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - அண்ணன், தம்பி கைது
    X

    பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - அண்ணன், தம்பி கைது

    வில்லியனூர் அருகே பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே பேரணை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது45). இவர் வில்லியனுர் அருகே கூனிமுடகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பக்கிரிபாளையத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான ஜெயராமன் (27), சீத்தாராமன் (25) ஆகியோர் ஏற்கனவே பணம் கடன் வாங்கி இருந்தனர்.

    அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காத நிலையில் நேற்று பெட்ரோல் பங்கில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் ரூ.500 கடன் கேட்டனர். ஆனால் தமிழ்செல்வன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன்-சீத்தாராமன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்செல்வத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தமிழ்செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயராமன்- சீத்தாராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×