search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competitions"

    • கலை திருவிழா போட்டிகள் நடந்தது.
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    அரியலூர்

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா நடந்தது. 5 தினங்களாக நடந்த இந்த விழாவில் கரகாட்டம், காய்கறி சிற்பங்கள், ஒவியம் வரைதல், களிமண் சிற்பங்கள் உள்ளிட்ட 92 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த மாணவ-மாணவிகள் குழுக்கள் முதல் 2 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் கலை குழுக்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் முதல் 2 குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை திருவிழா போட்டிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி, கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் பாக்கியகுமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மகளிர் வாலிபால் போட்டி நடந்தது
    • 14 அணிகள் பங்கேற்று விளையாடின

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவில் 27 வயது மகளிருக்கான வாலிபால் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இதையடுத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதன்மையர்(டீன்)செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

    • வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, கவுன்சிலர் சரசு ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரவண முருகன் வரவேற்றார். இந்த போட்டியில் 16 அரசு நடுநிலைப்பள்ளிகள், 4அரசு உயர்நிலைப்பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்லெட்சுமி, பாண்டிக்குமார், பெரியகருப்பன், சரண்யா, அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    • வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன
    • 9-ந் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள்

    பெரம்பலூர்

    2022-23-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    பள்ளி அளவில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் அளவில் போட்டிகள் நடைபெற்றன.

    வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

    • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வருவாய்த்துறை ஆய்வாளர் துரைக்கண்ணு கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். சிறப்பு அளைப்பாளராக மேலாத்தூரை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குமார் கலந்து கொண்டார். போட்டியில் பலூன் உடைத்தல், இசை நாற்காலி, லெமன் இன் தி ஸ்பூன், மெமரி கேம், நண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.
    • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இணை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, இடைநிலை கல்வி அலுவலர் தியாகராஜன், தொடக்க கல்வி பார்த்தசாரதி மற்றும் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, வேழமுறித்தான் பேட்டை தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ஞானசேகர், வளமைய மேற்பார்வையாளர் முருகையன், வட்டார கல்வி அலுவலர் பவுலின் கலை விழாவின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.

    முன்னதாக மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் ஜானகி அனைவரையும் வரவேற்றார்.

    ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கணியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கலை திருவிழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.

    9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    முடிவில் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • அரசு பள்ளிகளில் கலை திருவிழா ேபாட்டிகள் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா நடைபெற்றது.

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவை, நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தொடக்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.

    இதே போல், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கலைவிழாவை ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். விழாவில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.

    • மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
    • ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொ ணரும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

    இதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தனிதிறன் வெளிக்கொணர ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலான போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதுடன் கல்வி சுற்றுலா செல்லவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது
    • வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), .கருவி இசை-தோற்கருவி, 4.கருவி இசை (துளைகாற்றுக்கருவிகள்), 5.கருவி இசை (தந்திக்கருவிகள்), 6.இசை சங்கமம், 7.நடனம், 8.நாடகம், 9.மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

    அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை, 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்குபெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார (முதலிடம்) அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

    திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணையின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022-க்குள்ளும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022-க்குள்ளும், மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.202- க்குள்ளும், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செய்ய பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.

    டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

    அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பேச்சுப்*போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு கிளை நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் லைலா பானு ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், வாசகர் வட்ட தலைவர் கணேசன், அய்யன் திருவள்ளுவர் அறப்பணி மன்றம் தலைவர் மாரியப்பன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், காந்திஜி சேவா சங்க செயலாளர் தவமணி, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. இதில் காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஜவகர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலாபானு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், தவமணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமங்கலி கோமதி சங்கர், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் அமுதா நன்றி கூறினார்.

    ×