search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனித்திறன்"

    • மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
    • ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொ ணரும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

    இதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தனிதிறன் வெளிக்கொணர ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலான போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதுடன் கல்வி சுற்றுலா செல்லவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகளின் தனித்திறன் கண்காட்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் கீழ் மாணவ மாணவியர்களின் தனித்திறன் கண்காட்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் பல்வேறு தனித்திறன் மாணவர்களின் கற்றல் திறன் இந்த கண்காட்சி யில் இடம் பெற்றி ருந்தது.

    பள்ளியின் முதல்வர் ஜான்கென்னடி கண்காட்சி யை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் பீட்டர் துரை, செயலாளர் ஆனந்த சேவியர் முன்னி லை வகித்தார்.

    தனித்திறன் கண்காட்சியை பெற்றோர் கள், பொது மக்கள் அதிக ளவில் கண்டு களித்தனர். சிறப்பாக படங்களை வரைந்த, செயல்வடிவங் களை செய்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க ப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.

    ×