search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள்
    X

    அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள்

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா நடந்தது. 5 தினங்களாக நடந்த இந்த விழாவில் கரகாட்டம், காய்கறி சிற்பங்கள், ஒவியம் வரைதல், களிமண் சிற்பங்கள் உள்ளிட்ட 92 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த மாணவ-மாணவிகள் குழுக்கள் முதல் 2 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் கலை குழுக்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் முதல் 2 குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை திருவிழா போட்டிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி, கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் பாக்கியகுமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×