search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore suicide"

    கோவை ஒண்டிப்புதூரில் தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்காநல்லூர்:

    கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் நொய்யல் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது அம்மா இறந்து விட்டார். இதனையடுத்து அவரது அக்கா அவரை கவனித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ரவிக்குமார் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை இடிகரை அருகே சாப்பாடு நன்றாக இல்லையென கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை இடிகரை அருகே உள்ள ஜெம் கார்டனை சேர்ந்தவர் தேவா. அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியராக உள்ளார். இவரது மனைவி தங்கம் என்கிற சரசு (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று மதியம் தங்கம் உணவு சமைத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார். அப்போது சாப்பாடு நன்றாக இல்லை என தேவா கூறி உள்ளார்.

    இதனால் தங்கம் மிகுந்த மனவேதனை அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சமபவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை மாவட்டம் சூலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    சூலூர் அருகே நடுப்பாளையம் பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் சுரேஷ் (வயது 25). இவர் ராமநாதபுரம் போலீசாருக்கு உதவியாக முழு நேர பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த மைதிலி (20) என்ற பெண்ணிற்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.

    சுரேசுக்கு போதிய வருமானம் இல்லாததால், மைதிலி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமேண்டோ பயிற்சி பெறுவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். பயிற்சி முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினார்.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சாணிப்பவுடரைக் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சுரேஷ், மைதிலி ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே திருமணமான 1 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம் பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கூலி தொழிலாளி.

    இவருக்கும், ரத்தினபுரியை சேர்ந்த லட்சுமி(20) என்ற பெண்ணுக்கும் கடந்த 27.08.2017 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று லட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். லட்சுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும், திருமணத்துக்கு முன்பு 2 முறை, திருமணத்துக்கு பிறகு 3 முறை என ஏற்கனவே 5 முறை தற்கொலை செய்ய முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களாக லட்சுமி தனது பெற்றோர் வீட்டு அருகிலேயே நாமும் சென்று விடலாம் என கணவரிடம் கூறி வந்தாராம். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    திருமணமாகி 1 வருடம் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர், லட்சுமியின் குடும்பத்தினர், உறவினர்களிடம் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவையில் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கோவில்பாளையம் கவைய காளியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜென்சி (வயது 28). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று ஜென்சி திடீரென இறந்து விட்டார்.

    இது குறித்து ஜென்சியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் எனது மகளும், ஜெகவீரபாண்டியனும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பின்னர் எனது மகளிடம் வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் கொடுமை படுத்தினர். குழந்தைக்கு செய்ய வேண்டிய நகையை முறைப்படி அணிவித்தோம்.

    இந்நிலையில் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்ட ஜென்சி வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகவும், சாப்பாடு கூட தராமல் பட்டினியாக உள்ளதாகவும் கூறினார். மேலும் தன்னை இங்கிருந்து மீட்டு செல்லும்படி கூறி அழுதார்.

    இந்நிலையில் நேற்று இரவு நான் போன்செய்தேன். எனது மகள் மிகவும் சோகமாக பேசினார். ஏன் என்று கேட்டபோது அவர் ஒன்றுமில்லை என்று கூறினார்.

    நள்ளிரவு ஜெகவீரபாண்டியன் என்னை தொடர்பு கொண்டு உங்கள் மகள் சாணிப்பவுடர் குடித்து விட்டார். அவரை காப்பாற்ற மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டதாக கூறினார்.

    வரதட்சணை கொடுமையால் தான் ஜென்சி தற்கொலை செய்து கொண்டார். எனவே அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    வடவள்ளியில் தாய் -மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அருண் நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மனோகரி (75). இவர்களுக்கு சதிஷ் (44) என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

    சீனிவாசன் இறந்து விட்டதால் மனோகரியும், அவரது மகன் சதிசும் பால், தயிர் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று இரவு 8 மணி வரை இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது மனோகரியும் அவரது மகன் சதிசும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர்.

    அவர்கள் சாணிப்பவுடரை குடித்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    மயங்கி கிடந்த தாய் -மகன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை மனோகரி, அவரது மகன் சதிஷ் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

    சதிஷ் வி‌ஷம் குடிப்பதற்கு முன் ஒரு நோட்டில் தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பால், தயிர் சப்ளை செய்தததில் ஏராளமானோர் பாக்கி வைத்து விட்டனர்.

    இதனால் பால் கம்பெனிக்கு பணம் செலுத்த முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம் என அதில் எழுதப்பட்டு இருந்தது.

    சதிஷ் எழுதி வைத்த நோட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை வடவள்ளி பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நடைபெற்றது.

    தற்போது தாய்-மகன் தற்கொலை செய்து இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×