search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chutney"

    • வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
    • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தனியா - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.

    எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,

    காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),

    கறிவேப்பிலை - கால் கப்,

    தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

    கருப்பட்டி - சிறிய துண்டு,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை

    செய்முறை:

    கடாயில் சிறிது 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான சட்னி தயார்!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    பெண்கள் தினமும் எள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 1/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    பூண்டு - 4 பற்கள்

    இஞ்சி - 1 துண்டு

    வரமிளகாய் - 7

    புளி - 1 எலுமிச்சை அளவு

    கடுகு-1 /2 ஸ்பூன்

    உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்

    கறிவேப்பிலை-1 கொத்து

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.

    எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

    இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 200 கிராம்,

    காய்ந்த மிளகாய் - 3,

    உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும்

    அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

    பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    புதினா - 1 கப்

    கொத்தமல்லி - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 5

    இஞ்சி - சிறிய துண்டு

    புளி - நெல்லிக்காய் அளவு

    உப்பு - சுவைக்கு

    தாளிக்க

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்

    செய்முறை :

    புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.

    மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறுங்கள்.

    அவ்வளவுதான் வேர்க்கடலை புதினா சட்னி தயார்.

    இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

    • இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
    • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் - 75 கிராம்

    தக்காளி - 2

    பூண்டு - 6 பற்கள்

    வர மிளகாய்- 12

    புளி - எலுமிச்சை அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கொத்து

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதே ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

    அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

    சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி!

    சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    • இந்த சட்னி சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
    • வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்

    புளி - தேவையான அளவு

    உளுந்து - 3 டீஸ்பூன்

    தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.

    செய்முறை :

    வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.

    வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி.

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    தக்காளி - 3,

    பெரிய வெங்காயம் - 2,

    புதினா - அரை கைப்பிடி,

    வர மிளகாய் - 5,

    புளி - ஒரு சிறு நெல்லி அளவு,

    இஞ்சி - ஒரு சிறு துண்டு,

    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.

    அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

    இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைக்க வேண்டும்.

    ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார்.

    இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    • மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
    • முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி - 1/2 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

    • நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
    • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய் - 10

    கொத்தமல்லித்தழை - 1 கப்

    கறிவேப்பிலை - ¼ கப்

    பச்சை மிளகாய் - 7

    இஞ்சி - சிறு துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தேங்காய் - சிறு துண்டு

    கடுகு - ½ டீஸ்பூன்

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.

    பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.

    கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.

    கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.

    இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.

    • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
    • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,

    கொள்ளு - 30 கிராம்,

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்,

    காய்ந்த மிளகாய் -10,

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

    கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

    கடுகு, கறிவேப்பிலை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

    • உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
    • பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்

    தேங்காய் - 2 துண்டு

    புளி - நெல்லிக்காய் அளவு

    பூண்டு - 2 பல்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய் - 6

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!

    ×