என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
15 நிமிடத்தில் வேர்க்கடலை புதினா சட்னி செய்யலாம் வாங்க...
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சுவைக்கு
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்
செய்முறை :
புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.
மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறுங்கள்.
அவ்வளவுதான் வேர்க்கடலை புதினா சட்னி தயார்.
இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்