search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Rains"

    • சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று.
    • மிச்சாங் புயல் காரணமாக கரை உடைந்ததாக செய்திகள் வெளியாகின.

    புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும்.

    இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மிச்சாங் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

    அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

    இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு செயற்பொறியாளர்,நீவது., கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், திருவள்ளூர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை தடைப்பட்டது.
    • புறநகர் ரெயில் சேவை குறித்து தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு.

    மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 07) சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர் - அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரெயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், நாளை (டிசம்பர் 08) முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் சீராக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிச்சாங் புயலால் சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • நாளைக்கும் மீட்புப்பணி முழுமையாக முடியவடைய வாய்ப்பு இல்லை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நான்கு மாவட்டங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை நீர் வேகமாக வடிய வாய்ப்பில்லை. இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயலால் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.
    • நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பதால் நாளை சகஜ நிலை திரும்புவது கடினம்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்னும் மழையும், காற்றும் ஓய்ந்தபாடில்லை.

    இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இன்று இரவு வரை மழையும், காற்றும் நீடிக்கும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

    இரவுக்குப்பின் மழை ஓய்ந்தாலும் தண்ணீர் வடிந்து நாளை உடனடியாக சகஜ நிலை திரும்ப வாய்ப்பில்லை. இதனால் நாளையும் நான்கு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக விடுமுறை அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிறைந்து தண்ணீர் வெளியேற்றம்.
    • பெருங்களத்தூர் சாலையில் பயமுறுத்தும் வகையில் முதலையின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 24 மணி நேரத்திற்குள் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை புறநகரில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது.

    இதனால் நீர் நிலைகளில் இருந்து ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்த வண்ணம் உள்ளது. அப்படி நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது, அதில் முதலை இருந்தால் வெளியேறிவிடும்.

    அந்த வகையில் சென்னை வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம்- பெருங்களத்தூர் சாலையில சுமார் 6 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட முதலை ஒன்று நீர் நிலையில் இருந்து வெளியேறி, ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலை நடந்து செல்வதை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து அதை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், முதலை சாலையை கடக்கும்போது இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளனதாகவும் புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும்" தெரிவித்துள்ளார்.

    ஆனால், மழை வெள்ளம் எப்போது வடியும் என அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், முதலை வீட்டிற்குள் வந்துவிடுமோ என்ற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

    • 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
    • மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை 20 செ.மீ வரை மழை கொட்டியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நேரம் செல்லசெல்ல ஓடுதளத்தில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் விமானத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்த சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஓடு தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினால்தான் வழக்கமான விமான சேவைகளை இயக்க முடியும். இதனால் இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இருந்தபோதிலும் பெங்களூரு, டெல்லி, திருச்சி, கோவை, மதுரை, போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்வதால் கனமழை வெளுத்து வாங்கும் என அறிவிப்பு.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும்.

    மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- வடகிழக்குப் பகுதியில் சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

    இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. அதனைத்தொரடர்ந்து தற்போது தீவிர புயலாகியுள்ளது.

    இருந்தபோதிலும் 11.45 மணி நிலவரப்படி சென்னையில் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில், மணிக்கு 8 கி.மீ. அளவிலேயே நகர்ந்து வருகிறது. மிகவும் மெல்லமெல்ல நகர்வதால் மழை வெளுத்து வாங்குகிறது. பெரும்பாலான இடங்களில் 25 செ.மீ.-க்கு அதிகமான மழை பெய்துள்ளது. மழை நீர் வடியாததால் சென்னை மாநகரம் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    புயல் சென்னையை கடந்ததும் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழையுடன் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • மாநகராட்சி அறைக்கு தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

    சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பெய்த மழை இரவில் தொடர்ந்து பெய்தது. நள்ளிரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அதிகாலை 3 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    மிக கனமழை பெய்தததால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. அதிகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் முற்றிலும் விழுந்தன. மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் 80 கி.மீ.-க்கு அதிகமான வேகத்தில் காற்று வீசின. இதனால் மரங்கள் வோரோடு சாய்ந்தன.

    அண்ணாநகர், முகப்பேர், பெரம்பூர், மாதவரம் கொடுங்கையூர், கெல்லிஸ், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. நகரம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததில் யாருக்கும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மாநகராட்சி அறைக்கு தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினார்கள். கொட்டும் மழையிலும் விடிய விடிய மரங்கள் வெட்டி அகற்றியதால் போக்குவரத்துக்கு தடை ஏற்படவில்லை. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றிய இடங்கள் போர்களம் போல் காட்சி அளித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.
    • தொடர்ந்து மழை பெய்வதால் மழை நீர் வடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை பாதிப்பு குறித்து பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் ராமன் கூறியதாவது:-

    புயல் சின்னம் கடலோர மாவட்டங்கள் அருகே நெருங்கி செல்வதால் கனமழை நீடித்து வருகிறது. அடையாறு கூவம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் அனைத்து கால்வாய்களிலும் மழைநீர் அதிகம் செல்கிறது.

    கடல் நீர் எதிர்த்து வருவதால் ஆறு-கால்வாய் தண்ணீர் மெதுவாகத்தான் கடலுக்குள் செல்கிறது. எனவே பொது மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இதுவரை 153 முகாம்களில் 6,200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை பெருங்குடியில் அதிக பட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மீட்பு நிவாரண பணிகளுக்கு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மழை தொடர்ந்து பெய்வதால் அனைத்து ரோடுகளிலும் மழைநீர் மெதுவாகதான் வடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிச்சாங் புயல் சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
    • கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது.

    வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- வடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

    அதன்பின் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • சென்னையில் கனமழை பெய்து வருவதால் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது.
    • பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.

    பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ×