search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subruban Train"

    • மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை தடைப்பட்டது.
    • புறநகர் ரெயில் சேவை குறித்து தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு.

    மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 07) சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர் - அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரெயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், நாளை (டிசம்பர் 08) முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் சீராக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது. 

    ×