search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai harbor"

    சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PonRadhakrishnan #BJP
    சென்னை:

    சென்னை துறைமுக தின விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணிகள் முனையம் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தை திறந்துவைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை துறைமுக தலைவர் ப.ரவீந்திரன், சுற்றுலாதுறை ஆணையர் வி.பழனிகுமார், சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தின் மொத்த பரப்பளவு 2 ஆயிரத்து 880 சதுர மீட்டர் ஆகும். 17 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த முனையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    விழாவில், சிறப்பாக பணிபுரிந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை துறைமுகம் பெரிய துறைமுகமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் நிகர லாபம் ரூ.6 கோடியாக இருந்தது. தற்போது இதன் நிகர லாபம் ரூ.230 கோடியாக உயர்ந்து உள்ளது.

    இந்தியாவின் முதன்மை துறைமுகமாக இதனை கொண்டு வர சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை உயிர்பெற செய்ய வேண்டும்.



    இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக துறைமுக அதிகாரிகள், சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    கூடிய விரைவில் இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்று நம்புகிறேன். தமிழக சுற்றுலா துறையானது கன்னியாகுமரி, ராமேசுவரம், மணப்பாடு, மகாபலிபுரம் வரை பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

    அந்த திட்டத்தை திருவனந்தபுரம் கோவளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்சிடம் தெரிவித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் கூறுகையில், ‘உலக அளவிலான சுற்றுலாத்துறையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது இந்தியா 65-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 2-வது இடத்திலும், உள்நாட்டு சுற்றுலாத்துறையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை முதல் கன்னியா குமரி வரையிலான கடல்வழி பயணிகள் போக்குவரத்து உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். #PonRadhakrishnan #BJP 
    சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிற்கும் இரண்டு கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.#HighCourt #ChennaiHarbor

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் ‘ரைசிங் ஸ்டார்’, ‘ரைசிங்சன்’ என்ற 2 கப்பல்கள் கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்து நின்று கொண்டிருக்கிறது.

    இந்த கப்பல்களை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை சென்னை துறைமுக நிர்வாகத்திடம் அந்த கப்பல் நிறுவனம் முறையிட்டது.

    ஆனால், கப்பலை பழுது பார்க்க மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கப்பலை உடைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதி வழங்கினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னை துறைமுகம் நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த கப்பல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகா தேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘8 ஆண்டுகளாக கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பல்கள் கடலில் மூழ்கும் முன்பு, அதை உடைக்க அனுமதி வழங்கினால் என்ன? என்று கேட்டனர்.

    துறைமுகம் சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ‘துறை முகத்தில் கப்பல்களை உடைக்க அனுமதி வழங்க முடியாது. கப்பல் மூழ்கி விடும் நிலை, உடைக்க அனுமதித்தால், அது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மேலும் பல நிறுவனங்கள் வழக்கு தொடரும். அவ்வாறு கப்பல்களை உடைக்க அனுமதித்தால், கடலில் மிகப்பெரிய மாசு ஏற்படும்’ என்றார்.

    இதையடுத்து, இந்த இரு கப்பல்களின் நிலை என்ன? அவற்றை உடைக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிடலாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த வழக்கை நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #ChennaiHarbor

    சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.#chennaiharbor
    சென்னை:

    சென்னை துறைமுக சபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.

    இதற்கு முன்பாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி ‘எம்.வி.ஒயின் ஷன்’ என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 531 டன் சரக்கு இறக்குமதி செய்தது சாதனையாக இருந்தது.

    தற்போதைய சாதனைக்கு காரணமான, கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த பெல் நிறுவனத்துக்கும், சரக்கு இறக்கும் ஊழியர்களுக்கும் துறைமுக சபை தலைவர் ரவீந்திரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #chennaiharbor
    ×