search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் நிற்கும் 2 கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா? - ஐகோர்ட்டு கேள்வி
    X

    8 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் நிற்கும் 2 கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா? - ஐகோர்ட்டு கேள்வி

    சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிற்கும் இரண்டு கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.#HighCourt #ChennaiHarbor

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் ‘ரைசிங் ஸ்டார்’, ‘ரைசிங்சன்’ என்ற 2 கப்பல்கள் கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்து நின்று கொண்டிருக்கிறது.

    இந்த கப்பல்களை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை சென்னை துறைமுக நிர்வாகத்திடம் அந்த கப்பல் நிறுவனம் முறையிட்டது.

    ஆனால், கப்பலை பழுது பார்க்க மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கப்பலை உடைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதி வழங்கினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னை துறைமுகம் நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த கப்பல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகா தேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘8 ஆண்டுகளாக கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பல்கள் கடலில் மூழ்கும் முன்பு, அதை உடைக்க அனுமதி வழங்கினால் என்ன? என்று கேட்டனர்.

    துறைமுகம் சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ‘துறை முகத்தில் கப்பல்களை உடைக்க அனுமதி வழங்க முடியாது. கப்பல் மூழ்கி விடும் நிலை, உடைக்க அனுமதித்தால், அது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மேலும் பல நிறுவனங்கள் வழக்கு தொடரும். அவ்வாறு கப்பல்களை உடைக்க அனுமதித்தால், கடலில் மிகப்பெரிய மாசு ஏற்படும்’ என்றார்.

    இதையடுத்து, இந்த இரு கப்பல்களின் நிலை என்ன? அவற்றை உடைக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிடலாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த வழக்கை நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #ChennaiHarbor

    Next Story
    ×