search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu"

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை 10 மணி நேரம் மின்சார ரெயில்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வண்டலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் மேற்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலையில் மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நைஜீரிய மாணவியை பார்த்ததும் அருகில் சென்று பேச்சு கொடுத்தனர்.

    திடீரென இருவரும் சேர்ந்து அவரது வாயை பொத்தி புதர் மண்டிய பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினர்.

    அப்போது 2 வாலிபர்களும் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கற்பழிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஒருவரது பெயர் தமிழரசன், இன்னொருவரது பெயர் ஜெயவேல் என்பது தெரிய வந்தது. காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த தமிழரசன், திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயவேல் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர். நண்பரான இவரை பார்ப்பதற்கு நேற்று மாலையில் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது தான் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் பெண்கள் வன்கொமை தடுப்பு சட்டம், கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    செங்கல்பட்டு அருகே கான்கிரீட் இடிந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி அபிதா, மகன்கள் சரவணன் (14), பிரவீன் (8), மகள் பிரவீனா (11).

    நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் பிதா, பள்ளி மாணவி பிரவீனா, சிறுவன் பிரவீன் காயம் அடைந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த சிறுமி பிரவீனா சம்பவ இடத்திலேயே இறந்தாள்.

    அபிதா, பிரவீன் ஆகியோரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவணன் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றதால் காயமின்றி தப்பினான்.

    இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். #Tamilnews

    செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் கேரள கல்லூரி மாணவியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் (வயது 20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அவர் மாயமானார்.

    இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேஸ்னாவை தேடிவந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போன கல்லூரி மாணவி ஜோஸ்னா குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் கொல்லப்பட்ட பெண்ணின் உடலிலும் காணப்பட்டது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் கேரள போலீசார் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்வையிட்ட பின்னரே அது மாணவி ஜோஸ்னாவா என்பது தெரியவரும்.

    ×