search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating case"

    • தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
    • முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    "ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.800 கோடி மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ. 12 1/2 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் உள்ள நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மாயகுமார் (வயது 32). இவர் அருகில் உள்ள கண்மாய்க்கரை பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாயக் குமார் செல்லூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அழகர்கோவில் மெயின் ரோட்டைச் சேர்ந்த சரவணக் குமார், அவரது மனைவி ஆகியோர் ஏலச்சீட்டில் சேர்ந்தனர். அவர்கள் பணம் கட்டுவதற்கு முதல் மாதத்திலேயே மொத்த ஏலச்சீட்டு தொகை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் பின்னர் சீட்டுப்பணத்தை செலுத்தவில்லை. பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி வங்கியில் கார் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு கிளையான இனாம் குளத்தூர் கிளையில் அக்பர் (வயது 55) மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    அந்த வங்கியில் கார் வாங்குவதற்காக தனியார் நிறுவனம் பெயரில் ரூ.18 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. பின்னர் வங்கியில் காரின் ஆவணங்களை ஒப்படைக்கு மாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.

    இது குறித்து வங்கி மேலாளர் திருச்சி மாநகர துணை கமி‌ஷனரிடம் புகார் செய்தார். இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த நாகராஜ் (53), விமல் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் சேதுபதி (வயது44). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது மகன் வேலை தேடிக்கொண்டிருந்தபோது மதுரை காளவாசலைச் சேர்ந்த நண்பர் சல்மான் என்பவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார்.

    இதை நம்பி சல்மான் கூறியபடி அருப்புக்கோட்டையை சேர்ந்த கணேசன், அவரது தாயார் மற்றும் குமார் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் கொடுத்தேன். பணம் வாங்கி பின்பு அவர்கள் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

    எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் சல்மான், கணேசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கணவன் -மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பூங்காநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சந்திரகுமாரி, மகள் குமுதவல்லி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாத தவணை முறையில் பணம் கட்டி வந்தார். சீட்டு முடிந்த பின்பும் மணிக்கு பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயன் இல்லை.

    இதுகுறித்து மணி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தார். இந்த மனு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 34 லட்சத்து 33 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப் பிரிவு போலீசார் சீட்டு பண மோசடி செய்த ரவிச்சந்திரன், சந்திரகுமாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரவிச்சந்திரன் மகள் குமுத வல்லியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×