search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 10 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த கும்பல்- ரூ.800 கோடியை சுருட்டிய 15 பேரை பிடிக்க அதிரடி வேட்டை
    X

    சென்னையில் 10 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த கும்பல்- ரூ.800 கோடியை சுருட்டிய 15 பேரை பிடிக்க அதிரடி வேட்டை

    • தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
    • முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    "ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.800 கோடி மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×