search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ.12 1/2 லட்சம் மோசடி - கணவன்-மனைவி மீது வழக்கு
    X

    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ.12 1/2 லட்சம் மோசடி - கணவன்-மனைவி மீது வழக்கு

    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ. 12 1/2 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் உள்ள நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மாயகுமார் (வயது 32). இவர் அருகில் உள்ள கண்மாய்க்கரை பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாயக் குமார் செல்லூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அழகர்கோவில் மெயின் ரோட்டைச் சேர்ந்த சரவணக் குமார், அவரது மனைவி ஆகியோர் ஏலச்சீட்டில் சேர்ந்தனர். அவர்கள் பணம் கட்டுவதற்கு முதல் மாதத்திலேயே மொத்த ஏலச்சீட்டு தொகை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் பின்னர் சீட்டுப்பணத்தை செலுத்தவில்லை. பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×