search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது
    X

    திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது

    திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கணவன் -மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பூங்காநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சந்திரகுமாரி, மகள் குமுதவல்லி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாத தவணை முறையில் பணம் கட்டி வந்தார். சீட்டு முடிந்த பின்பும் மணிக்கு பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயன் இல்லை.

    இதுகுறித்து மணி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தார். இந்த மனு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 34 லட்சத்து 33 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப் பிரிவு போலீசார் சீட்டு பண மோசடி செய்த ரவிச்சந்திரன், சந்திரகுமாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரவிச்சந்திரன் மகள் குமுத வல்லியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×