search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chapati"

    அரிசி மாவில் காய்கறிகளை சேர்த்து செய்யும் ரொட்டி சூப்பராக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இன்று இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய் (அனைத்தும் துருவியது) - 2 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    அரிசி மாவு - 2 கப்
    சீராகத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    சீரகம் - 2 டீஸ்பூன்
    பெருங்காயம் - சிட்டிகை
    வெண்ணெய் - 100 கிராம்



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் காய்கறித் துருவல், சீரகம், சீரகப் பொடி, உப்பு, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஆரஞ்சு பழ அளவுக்கு எடுத்து, தோசைக்கல்லில் வைத்து மெலிதாகத் தட்டுங்கள். சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்நாடகாவில் இந்த அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்வதால் சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்  
    பச்சை மிளகாய் - 3  
    மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கோதுமை மாவு - 200 கிராம்  
    நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

    பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ங

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லி, வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பார்லி மாவு - 3 கப்
    வெந்தயக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3
    உப்பு, எண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடனாதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற விடவும்.

    கீரை ஆறியவுடன் அதனுடன் பார்லி மாவு, உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தி போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான பார்லி வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    ஓட்ஸ் - 3/4 கப்
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - 1/4 கப்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :


    ஓட்சை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து பொடித்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, துருவிய கேரட், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய் பேஸ்ட், மல்லித்தூள, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு, உருளைக்கிழங்கு சேர்த்து பரோட்டா செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பரோட்டா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்  :

    கோதுமை மாவு - அரை கப்
    கேழ்வரகு மாவு - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
     
    ஸ்டஃப்பிங்க்கு...

    உருளைக்கிழங்கு - 1
    கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
    ஒமம் - கால் ஸ்பூன்



    செய்முறை :

    கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிட மிகவும் உகந்தது கோதுமை ரவை தேப்லா. இன்று இந்த தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - கால் கப்,
    கோதுமை மாவு - ஒரு கப்,
    ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
    ஓமம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

    மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

    சூப்பரான சத்தான கோதுமை ரவை தேப்லா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    குழந்தைகளுக்கு கீமா சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த கீமா சப்பாத்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சப்பாத்திக்கு...

    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை  :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

    பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×