search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NonVeg Recipes"

    சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
    கொத்தமல்லி இலை - 2 கட்டு
    புதினா இலை - 1 கட்டு
    வெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 250 மில்லி லிட்டர்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

    சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

    அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

    அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

    வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாசி - 1 துண்டு (25 கிராம்)
    பெரிய  வெங்காயம் - 100 கிராம்
    பழுத்த தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
    கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாசி தொக்கு ரெடி.

    சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீமா சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த கீமா சப்பாத்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சப்பாத்திக்கு...

    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை  :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

    பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×