search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Chapati"

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 250 கிராம்,
    உப்பு - தேவைக்கு,
    ஓட்ஸ் - 100 கிராம்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    எண்ணெய் - 30 மி.லி.,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை - 4
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1  
    பெ.வெங்காயம் - 3  
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

    அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை  - 1 கட்டு
    இஞ்சி - 1/4 அங்குலம்
    எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்
    கோதுமை மாவு - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :
     
    முளைக்கீரையை சுத்தம் செய்து மண் போக அலம்பி பொடியாக நறுக்கவும்.

    பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

    கோதுமை மாவில் நறுக்கிய கீரை, அரைத்த விழுது, உப்பு, எள், ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி 1/2 மணி நேரம் வைக்கவும்.

    பின்பு எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    இதற்குப் புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி, தால், குருமா பொருத்தமாக இருக்கும்.

    முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லி, வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பார்லி மாவு - 3 கப்
    வெந்தயக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3
    உப்பு, எண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடனாதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற விடவும்.

    கீரை ஆறியவுடன் அதனுடன் பார்லி மாவு, உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தி போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான பார்லி வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீமா சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த கீமா சப்பாத்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சப்பாத்திக்கு...

    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை  :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

    பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×