search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car collision"

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார்.
    • அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத், (வயது 22). எலக்ட்ரிசியன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தன் தாயார் ஜோதிமணி(56), என்பவருடன் சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார். அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த பொன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    • செல்வகார்த்தி கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார்.
    • வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகார்த்திக்(30). கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பர் பொறையூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் (17) இவருடன் செல்வகார்த்திக் புதுச்சேரி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராகவனை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள செலம்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) விவசாயி. சம்பவத்தன்று இரவு முனியப்பன் தனது மொபட்டில் பால் கேன் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள புன்னம் நாரப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (29). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் நந்தகோபால் (26).

    இவர்கள் 2 பேரும் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோடு, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சக்திவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையிலும், நந்தகோபால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார் டிரைவர் அர்த்தனாரீஸ்வரர் என்பவரிடம் போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்பையில் டீக்கடை முன்பாக ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடன்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவரது நண்பர் மாணிக்கம் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தனர்.
    • விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    உடன்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவரது நண்பர் மாணிக்கம் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தனர்.

    நேற்று முத்துக்குமாரும், மாணிக்கமும் சினிமா பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாத்தான் குளம் சென்றுள்ளனர். சினிமா பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் உடன்குடி திரும்பினர்.

    அப்போது சாத்தான் குளம் அரசு கலைக்கல்லூரி அருகே வந்தபோது கார் ஒன்று அவர்களின் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த மாணிக்கம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடுமையான போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேலூர் கொணவட்டம் மேம்பாலம் அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பிகளை மோதிவிட்டு எதிர்சாலைக்கு சென்றது.

    அப்போது அந்த சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    உடனடியாக இதை பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது அதன்பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதியது.

    அடுத்தடுத்து கார்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த போது அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி, இவர் நேற்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டை க்கு சென்றார். வேலை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×