search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank account"

    ரெயில் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கட்டுக்கட்டாக இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. மொத்தம் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முகர்சிங் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கைதான 7 பேரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களது சொத்துகளை முடக்கம் செய்ய இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    திருச்சியில் 6 பேரின் வங்கி கணக்கை பெற்று கடன் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி ஒத்தக்கடை புதுதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி தரணி (வயது 25). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது;-

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாயக்கரை பாளையம் வடக்கு  தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 28)இவர் தனியார் செல்போன் ஷோருமில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் என்னுடைய தனி நபர் அடையாளம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட  விபரங்களை பெற்றுக் கொண்டார். 

    இதேபோல் மேலும் 6 நபர்களிடம் ஆவணங்களை பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள்அனைத்தும் பயன்படுத்தி ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் நுகர்வோர் கடன் பெற்றுள்ளார். தற்போது அதில் ரூ.3 லட் சத்து 30 ஆயிரம் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் மீதம் உள்ள ரூ.2 லட்சம் பணத்தை திரும்ப செலுத்த வில்லை. அந்த பணத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரிக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
    புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது ஏ.டி.எம். மோசடி குறித்து ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடியில் புதுவை மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் அது போல் புதுவையில் பரபரப்பு மோசடி சம்பவம் நடந்துள்ளது. புதுவையை சேர்ந்த 2 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.15 லட்சம் திருடப்பட்டுள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிஞ்சிப்பாடி அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி விவசாயி வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 47). விவசாயி. இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

    குமாருக்கு ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்க தெரியாததால் அங்கு பணம் எடுக்க வந்த மற்றொரு நபரிடம் குமார் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.

    உடனே அந்த நபர் குமாரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முயன்றார். அந்த எந்திரத்தில் பணம் வரவில்லை எனக்கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு எந்திரத்தில் குமாருக்கு பணம் எடுத்து கொடுத்தார். உடனே குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் அந்த நபர் ஏற்கனவே பணம் வரவில்லை எனக்கூறிய ஏ.டி.எம்.எந்திரம் மூலம் குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து குமார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றபோது அவரது வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் வங்கி அதிகாரியிடம் கேட்ட போது, அவர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    இதைகேட்ட அதிர்ச்சியடைந்த குமார் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை ஆய்வு செய்தபோது அதில் குமார் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய அந்த நபர் முகம் பதிவாகியிருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ்அனுவம்பட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(31) என்பதும், அவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    சேலத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது, அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் மாயமாகிவிட்டதாகவும், அதை எடுத்த மர்மஆசாமியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஒரு புகார் மனுவை அளித்தார். மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாவது:-

    சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டியிருப்பதால் உங்களது ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை தெரிவிக்குமாறும் கூறினார். நானும் வங்கியில் இருந்து பேசுவதாக நம்பி ரகசிய எண்ணை தெரிவித்தேன்.

    அதன்பிறகு பணம் தேவைப்பட்டதால் ஏ.டி.எம்.மையத்திற்கு சென்றேன். ஆனால் எனது வங்கி கணக்கில் இருந்து 14 ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று விசாரித்தபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார்கள். அப்போது தான், செல்போனில் பேசிய மர்மநபர், வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி ஏ.டி.எம்.கார்டு ரகசிய குறியீடு எண்ணை பெற்று பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர் யார்? என்று தெரியாது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த மர்ம ஆசாமியின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அந்த நபருக்கு இந்த பெண்ணின் செல்போன் நம்பர் எப்படி தெரியும்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×