search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balaji Mohan"

    வடசென்னை படத்தை அடுத்து, தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மார் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Maari2 #Dhanush
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.



    கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Maari2 #Dhanush
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #Dhanush #Maari2
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    தனுஷ் தற்போது வரலாற்று கதை ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Maari2 #Dhanush

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhaush #Maari2
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருக்கும் நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மாரி 2’ படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுகுறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது... மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஜாலியாக, விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. என்று கூறியுள்ளார். 

    இயக்குநர் பாலாஜி மோகன் கூறியிருப்பதாவது, 

    மாரி-2 படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சேட்டை நிறைந்த மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது தான். என்று குறிப்பட்டுள்ளார். 

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் நடித்துள்ளனர்.  வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush

    ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ‘மாரி 2’ இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் தனுஷுக்காக இணைய இருக்கிறார்கள். #Dhanush
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் உருவாகி வருகிறது. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

    அதுபோல் பாலாஜி மோகன் இயக்கி வரும் ‘மாரி 2’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



    எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இயக்குனர் கௌதம் மேனனும், ‘மாரி 2’ பட இயக்குனர் பாலாஜி மோகனும் தனுஷுக்காக இணைய இருக்கிறார்கள். தனுஷ் தனது பிறந்தநாளை ஜூலை 28ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதற்காக தனுஷின் ரசிகர்கள் ட்விட்டரில் காமன் டிபி வைக்க இருக்கிறார்கள். இந்த காமன் டிபியை கௌதம் மேனனும், பாலாஜி மோகனும் 26ம் தேதி மாலை 6.30 மணிக்கு ட்விட்டரில் வெளியிட இருக்கிறார்கள். 
    பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சண்டைக் காட்சியில் நடிகர் தனுஷ் காயமடைந்த நிலையில், தனது உடல்நலம் குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். #Dhaush #Maari2
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் தனுஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

    படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு முதலுதவி அளித்த படக்குழு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனுஷ் காயம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் கூறியிருப்பதாவது, `பெரிய காயம் எதுவும் இல்லை, நான் நலமுடன் இருக்கிறேன். ரசிகர்களின் அன்பு, வேண்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார். 
    பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். 

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush

    தியா படத்தை தொடர்ந்து `மாரி-2', `என்ஜிகே' படத்தில் பிசியாகி இருக்கும் நிலையில், மாரி-2 படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. #Maari2 #Dhanush
    மலையாள, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷ் ஜோடியாக `மாரி-2' படத்திலும், சூர்யா ஜோடியாக `என்ஜிகே' படத்திலும் நடித்து வருகிறார்.
     
    இதில் `மாரி-2' படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக சாய் பல்லவி சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம். பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். 



    60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், முழு படப்பிடிப்பையும் வருகிற ஜூலை மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

    படம் வருகிற நவம்பரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #Maari2 #Dhanush 

    பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி, தன்னுடைய பிறந்த நாளை மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #SaiPallavi #Maari2
    ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். 

    இவர் நடிப்பில் தற்போது தமிழில் ‘தியா’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருந்தார்கள். இதில் சாய் பல்லவி ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.



    தற்போது தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினருடன் நேற்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் சாய் பல்லவி. மேலும் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்வித்தனர்.
    ×