search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annamalayar"

    • மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம், அண்ணாமலையாராக கருதப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மட்டுமே இத்தகைய நடைமுறை உள்ளது.

    திருவண்ணாமலை கோவிலில் உள்ள மற்ற கடவுள் சன்னதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புக் கொண்டதாக திகழ்கின்றன.

    இத்தலத்து விநாயகர் ஆலயம் தான், விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் ஆலயத்தில் விநாயகர் தொடர்பான அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    ஒருநாள் நடை அடைக்கப்படும்

    திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்பட்டதும் அனைவரது கவனமும் தீபம் மீது திரும்பி விடும்.

    மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம், அண்ணாமலையாராக கருதப்படுகிறது.

    இதைக் கருத்தில் கொண்டு ஆலய கருவறையில் எந்த வழிபாட்டுக்கும் அனுமதி அளிக்க மாட்டார்கள்.

    மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட பிறகு உடனடியாக நடை அடைத்து விடுவார்கள்.

    அன்று முழுவதும் நடை திறக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மட்டுமே இத்தகைய நடைமுறை உள்ளது.

    • தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.
    • தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

    கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படுகிறது.

    இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளையும் மாடங்களையும் உடையது.

    மேற்குக் கோபுரம், பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

    மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.

    தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

    வடக்குக் கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

    வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள்.

    தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.

    தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.

    ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.

    • அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருவண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.
    • குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    நந்தி தேவரும், மார்க்கண்டேயரும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்த போது நந்திதேவர் திரு அண்ணாமலையை சிறந்த தலம் என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருஅண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.

    உடனே நந்திதேவர், "சிதம்பரத்தைக் கண்டால் முக்தி கிடைக்கும்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.

    இவை எல்லாவற்றையும் விட மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த இறைவனை மனதில் நினைத்தாலே

    இறைவன் உடனே வந்து அருள் தருவான்.

    எனவே திரு அண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.

    அதனால்தான் திருஅண்ணாமலையே சிறந்தது என்று கூறினேன்" என்று பதில் அளித்தார்.

    கரும்புத் தொட்டில்:

    அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.

    குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத் தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக் கொள்வார்கள்.

    இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    • பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.
    • ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.

    சித்த வைத்தியத்தில் இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக,

    பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவார் என்கிறார்கள்.

    இப்படி சொன்னால்தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பி சாப்பிடுவார்களாம்.

    மீனின் பெயர் செல்லாக்காசு:

    திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

    இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக் கொத்து.

    இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.

    அடேங்கப்பா இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால்,

    இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி! என்ற பதில் மட்டும்தான் கிடைக்கிறது.

    • திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
    • பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.

    திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.

    அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

    இது உலகிலேயே மிகப் பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

    முதல் கணக்கெடுப்பின் படி மலையின உயரம் 2665 அடி.

    போகர் செய்த சிலை

    அண்ணாமலையார் சந்நிதிக்கு நேராக மலையின் பின்புறம் உள்ள பகுதி, நேர் அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கே மண்டபம், கருவறை உண்டு. பின்னாக உண்ணாமலை அம்மை தீர்த்தமும் உண்டு.

    இங்குள்ள பழநி ஆண்டவர் சந்நிதியில் ஒரு மூலிகையிலான சிலை இருந்தது.

    பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.

    ஆனால் ரொம்ப காலத்துக்கு முன்பே இது களவாடப்பட்டு விட்டது.

    இங்கிருந்து பார்த்தால் மலையில் உள்ள கண்ணப்பர் கோவில் தெரியும்.

    • திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.
    • இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் இருந்தது.

    திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.

    அருள்பாலிக்கும் ஆண்டவனுக்கு முன்னொரு காலத்தில் வண்ணமலர் மாலைகளும், ரத்தின ஆபரணங்களும்

    கவின்மிகு ஆடைகளும் சந்தன அலங்காரத் தயாரிப்புகளும் அணிவிக்கப்பட்டன.

    மேலும் வேதவிற்பன்னர்களின் வேத முழக்கங்களும் ரீங்காரமிடும் இடமாக இருந்தது.

    இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு,

    வெளி உலகின் வெளிச்சத்திற்கு வராமல் மங்கிக் கிடந்தது.

    இதன் அருமை பெருமைகளை தீர்க்க தரிசனத்தோடு கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள்

    துணை ஆணையர் ஜெயராமனும் மற்றும் திருக்கோவில் அறங்காவலர்களும்தான்.

    • துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
    • இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

    அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

    கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.

    ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை சிறப்பு.

    இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

    இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

    கிருதய யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,

    துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

    • கிரி வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.
    • இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

    அருணாச்சலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிட்டும்.

    அதுமட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.

    இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு.சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

    மூன்றடியில் தான பலன். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன்.

    அதுமட்டுமா, வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும்.

    இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும்.

    மூன்றடிக்கு கோவில் கட்டிய பேறு கிடைக்கும்.

    அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும்.

    மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நானாவித பாவங்களும் காணாதொழியும்.

    பாதத் துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும்.

    கிரிவலம் வருவோரின் காலடித்தூசுபட்டு மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும்.

    வலம் வருவோர் கயிலாய மலையை அடைந்தவுடன் அங்கே அவர்களுக்கு சந்திரன் வெண்ணிறக் குடை பிடிப்பான்.

    சூரியன் தீபம் சுமப்பான். தருமதேவதை கைலாகு கொடுக்கும்.

    நானாவித பூக்களை நடைபாதையில் தூவி இந்திரன் உபசரிப்பான்.

    குபேரன் கைகளைக் கூப்பி சமீபம் வருவான். அஷ்ட வசுக்கள் மலர்மாரிப் பொழிவர்.

    அப்சரஸ்கள் (ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை) ஆடிப்பாடி அணி செய்வார்கள்.

    கங்காதேவியும், யமுனாதேவியும் சாமரம் வீசுவர்.

    மேகங்கள் அமுதம் ஏந்தி வந்து தாகம் தீர்க்கும்.

    திருமகள் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வருவாள்.

    நான்கு வேதங்களும் நாவாரப் புகழ்ந்து வரும்.

    • அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
    • மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்.

    பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

    இதனை, "ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்பார்கள்.

    பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்து.

    பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்று விடுவர்.

    மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர்.

    அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

    அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அதாவது அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

    மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

    மற்ற நாட்களில் இவர் சந்நிதியை விட்டு வருவதில்லை.

    • இங்கே சஞ்சீவி மற்றும் இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.
    • ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    இரும்பை தங்கமாக்கும் மூலிகை

    அண்ணாமலைச் சாரலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் செழித்து வளர்கின்றன.

    மனிதனின் அத்தனை பிணிகளுக்கும் அவை அருமருந்தாய் அமையும்.

    இங்கே சஞ்சீவி மூலிகை இருக்கலாம். இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.

    ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    கிரிவலம் வரும்போது நாம் மூலிகைக் காற்றை சுவாசிக்க முடியும்.

    அது நம் உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்

    அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண்,

    மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.

    அப்போது இதனை யாரும் நம்பவில்லை.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன.

    அவர் தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
    • ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.

    மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.

    அது மலை சுற்றும் பக்தர்கள் மீது படிந்தால் இகலோக சுகத்திற்கான அருளையும், பரலோக பாக்கியத்தையும் அளிக்கும்.

    பவுர்ணமியன்று வலம் வருவது சிறப்பு.

    ஆண்டுக்கொரு முறை பவுர்ணமி நாளில் தட்சிணாமூர்த்தியே மலை வலம் வருகிறார்.

    எத்தகைய பாவியும், தீப நாளில் ஐந்து முறை மலை சுற்றினால் அவனுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விசித்திர விநாயகர்

    மலை சுற்றுப்பாதையில் நிறையவே விநாயகர் கோவில்கள் (தனித்தனியே பதினாறு), முருகன் சன்னதிகள் (ஏழு) உள்ளன.

    ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.

    மலைச்சுற்று பாதையில் தட்சிணாமூர்த்தி கோவில்கள் இரண்டு, பாதமண்டபங்கள் இரண்டு, நந்தி தேவர் மண்டபங்கள் எட்டு, சிவாலயங்கள் எட்டு உள்ளன.

    இவை தவிர துர்க்கையம்மன் கோவில், வடவீதி சுப்பிரமணியர் கோவில், அனுமன் கோவில்,

    பூத நாராயணன் கோவில், வீரபத்ரர் கோவில், முனீஸ்வரர் கோவில், நவக்கிரக கோவில் ஆகியனவும் உள்ளன.

    • கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    • இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறலாம்.

    இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள்

    வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.

    இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும்,

    கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அவ்வபோது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற

    வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு, அம்மனின் பரிபூரண அருளை பெற்று வருவதாக நம்பப்படுகிறது.

    காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து

    ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

    இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்பாடும்,

    குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றையும் பெறலாம்.

    ×