search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைத்தாலே முக்தி"

    • அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருவண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.
    • குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    நந்தி தேவரும், மார்க்கண்டேயரும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்த போது நந்திதேவர் திரு அண்ணாமலையை சிறந்த தலம் என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருஅண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார்.

    உடனே நந்திதேவர், "சிதம்பரத்தைக் கண்டால் முக்தி கிடைக்கும்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.

    இவை எல்லாவற்றையும் விட மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த இறைவனை மனதில் நினைத்தாலே

    இறைவன் உடனே வந்து அருள் தருவான்.

    எனவே திரு அண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.

    அதனால்தான் திருஅண்ணாமலையே சிறந்தது என்று கூறினேன்" என்று பதில் அளித்தார்.

    கரும்புத் தொட்டில்:

    அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.

    குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

    தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத் தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக் கொள்வார்கள்.

    இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    ×